Skip to main content

பழனி ஐம்பொன் சிலை மோசடி வழக்கு!  சிபிசிஐடிக்கு மாற்றம்!!  பொண்மாணிக்கவேல் டீம் அதிர்ச்சி

Published on 02/04/2018 | Edited on 02/04/2018
murugan

 

பழனி முருகன் திருக் கோயிலுக்கு  ஐம்பொன் தங்கத்தால் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி நடந்து இருப்பது  தெரிந்ததின் பேரில் ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  ஐ.ஜி யான பொன் மாணிக்கவேல் தலைமையிலான டீம் கைது செய்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் உருவாக்கப்பட்ட நவபாசனத்தாலான   தண்டாயுதபாணி  (முருகன் ) சிலை தான்  பழனி மலையில் உள்ள  மூலஸ்தானத்தில்  உள்ளது.  அப்படிப்பட்ட நவப்பாசன முருகன்  தான் பக்தர்களுக்கு  காட்சி  அளித்து பக்தர்கள் வேண்டுதலையும் நிறைவேற்றி வருவதால் தினசரி ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள்  பழனிக்கு வந்து  இந்த  முருக பெருமானை தரிசித்து வருகிறார்கள். 


    

    இந்த நிலையில் தான் போகரால் உருவாக்கப்பட்ட முருகனின்  நவப்பாசன  சிலை பழுதடைந்துள்ளதால்  அதை மாற்றி அமைக்கவேண்டும் என காஞ்சி சங்கராச்சாரியார் கடந்த 2004லில் முதல்வராக  இருந்த  ஜெவிடம் வலியுத்தினார்.  அதை தொடர்து தான் அப்பொழுது  இருந்த கோவில் இ.ஓ. ராஜா மூலமாக  கும்பகோணத்தை சேர்ந்த  அரசு சிலை சிற்பியான ஸ்தபதி முத்தையாவிடம்  பத்து கிலோ தங்கம் கொடுத்து ஐம்பொன்னால் 200  கிலோ அளவில் முருகனின் மூலவர் சிலை செய்ய  சொல்லப்பட்டது .  ஆனால்  இஓ ராஜாவும், முத்தையாவும் விதி முறைப்படி ஐம்பொன் சிலை செய்யாமல் இருவரும்  கூட்டு கொள்ளை அடிப்பதற்காக சிலையில்  அதிமாக செம்பு கலந்ததுடன் மட்டுமல்லாமல் ஒரு துளி வெள்ளி கூட முலாம் பூசாமலேயே 21 கிலோ கூடுதலாக  சேர்ந்து 221   கிலோ எடையில்  ஐம்பொன் சிலை செய்து விட்டு  சிலைக்கு பயன்படுத்த வேண்டிய 41/2கிலோ தங்கத்தை மோசடி செய்து இருவரும் பங்கு போட்டு கொண்டு  இச்சிலையை  ஜெ. அனுமதியின் பேரில் அப்போதை மூலவ நவப்பாசன  சிலையை மறைத்து வைத்தனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவத்ததின் பேரில் அந்த  ஐம்பொன் சிலையை அகற்றி ஸ்டோர் ரூமில் போட்டு விட்டனர்.

 

 
        இந்த நிலையில் தான்  அந்த ஐம்பொன் சிலையில் மோசடி நடந்து இருப்பது  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யான பொன் மாணிக்கவேலுக்கு பல புகார்கள்  வந்ததின் பேரில் கடந்த வாரம்  சிலை செய்ததில் மோசடி செய்த ஸ்தபதி முத்தையாவையும், முன்னால் கோவில் இ.ஓ. ராஜாவையும்  சிலை தடுப்பு காக்கிகள் கைது செய்தனர்.


   அதை தொடர்ந்து தான் அந்த மொசடி சிலை செய்ததில் அப்பொழுது யார் யார் பணிபுரிந்தனர் அவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிப்பதற்காக ஐ.ஜி. பொண்மாணிக்கவேல் தலைமையில்  துணன கண்கானிப்பாளர் கருணாகரனுடன் இன்ஸ்பெக்டர் கார்த்தி  ஆகியோர் கடந்த  சில நாட்களுக்கு முன்  பழனிக்கு  விசிட் அடித்து   தற்பொழுது  இ.ஓ. வாக இருக்கும்  செல்வராஜ்  மற்றும் மேனேஜர் உமாவை விசாரணைக்கு வரச்சொல்லி காலை முதல் மாலை வரை அதிரடி விசாரணை  செய்தனர்.  அப்பொழுது 2004 முதல் தற்பொழுது வரை  பணிபுரிந்து வரும் அதிகாரிகளின் லிஸ்டை கேட்டதின் பேரில்  இ.ஓ.செல்வராசும்  மேனேஜர் உமாவும்  அந்த  லிஸ்டை கொடுத்து விட்டு போய் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து தான் சிலை தடுப்பு காக்கிகள் தொடந்து  விசாரணையில்  இருந்து வந்தனர். அதோடு இந்த மோசடியில் பலர் சிக்கப் போகிறார்கள்.

 

 இப்படி சிலை மோசடியில் சிக்கி இருக்கும்  அதோடு சிக்கப்போகும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை  வரை வாங்கி கொடுப்பேன் என  தற்பொழுது கடைகளில் விற்பனையில் உள்ள 4ம்தேதி  நமது நக்கீரனில் கூட வெளிப்படையாகவே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டி கொடுத்து இருந்ததை  வெளியிட்டு இருக்கிறோம்.  இந்த நிலையில் தான்  இபிஎஸ். ஒபிஎஸ்  அரசு திடீரென  இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து  சிபிசிஐடி க்கு மாற்றிவிட்டது.  இதை கண்டு பொண்மாணிக்கவேல் தலைமையிலான  காக்கிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏற்கனவே பல வழக்குகள்  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கிடப்பில்  தான் விசாரணை இருக்கிறது  அது போல் ஐம்பொன் சிலை மோசடி வழக்கும் கிடப்பில் போடுவதற்காக மாற்றப்பட்டு இருக்கிறது. அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு  இந்த வழக்கு மாற்றி இருக்கலாம் என்ற பேச்சு பரபரப்பாக பேசப் பட்டும்வருகிறது. 
     


         

சார்ந்த செய்திகள்

Next Story

பழனி : ரோப் கார் சேவை குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Palani: Important announcement by temple administration regarding rope car service

 

பழனி முருகன் கோயிலில் செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதாக மலைக்குச் சென்று முருகனை வழிபட கம்பிவட ஊர்தி (Rope Car) வசதி செய்யப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை இன்று (29.11.2023) ஒரு நாள் மட்டும் இயங்காது எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

Next Story

‘பழனிக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு’ - கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Attention to devotees going to Palani Important notice from the temple

 

பழனி முருகன் கோயிலில் செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதாக மலைக்குச் சென்று முருகனை வழிபட கம்பிவட ஊர்தி (Rope Car) வசதி செய்யப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை (29.11.2023) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.