Skip to main content

கதிராமங்கலத்தில் மீண்டும் ஒ.என்.ஜி.சி. குழாய் வெடிப்பால் பரபரப்பு

Published on 28/04/2018 | Edited on 28/04/2018

 

கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி. குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
 

தஞ்சை கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள ஒ.என்.ஜி.சி. குழாய்களில் கடந்த ஆண்டு ஜீன் 30ஆம் தேதி உடைப்பு ஏற்பட்டதையடுத்து ஒ.என்.ஜி.சி. பணிகளை நிறுத்தக்கோரியும், ஒ.என்.ஜி.சி. கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 இதையடுத்து கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு கிராம மக்களும் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர், இதனால் அப்பகுதியே  பெரும் களேபரமாக மாறியது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடத்தில் போலீசாரே தீ வைத்துவிட்டு மக்கள் மீது பழி போடுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
 

போராட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேர் மீது வழக்குப்போடப்பட்டு சிறையில் அடைத்தது காவல்துறை. அவர்களை விடுவிக்கவேண்டுமென, வர்த்தக சங்கத்தினர், பள்ளிக்கல்லூரி மாணவர்கள், அரசியல், அரசியல் அல்லாத இயக்கங்கள் என தொடர் போராட்டம் நடத்தினர். பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
 

ஆனாலும் 200 நாட்களை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் வெள்ளிக்கிழமை கதிராமங்கலம் - குத்தாலம் இடையே விளைநிலத்தில் செல்லும் எண்ணை குழாய் வெடித்து எண்ணை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து; அலறியடித்து ஓடிய மக்கள்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Boiler explosion accident in Indian Oil Company in chennai

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகிறார்கள்.  இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று (27-12-23)இந்த நிறுவனத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த விபத்தால், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

இதனையடுத்து, அப்பகுதியில் தீப்பற்றி எரிந்து பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், பாதிப்புள்ளாகிய ஊழியர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதில், சரவணா மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சரவணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியை சுற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால், திடீரென்று எண்ணெய் கசிவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

குழாயடி சண்டை கொலையில் முடிந்த பரிதாபம்

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

karur thirukkampuliyur  common pipe water incident 

 

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ - பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். வழக்கம்போல் இன்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள பொதுக்குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்த சண்டை குறித்து கார்த்தியின் மனைவி, கார்த்தியிடம் அழுது கொண்டே புகார் சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு கோபம் அடைந்த கார்த்தி, இளங்கோவின் வீட்டிற்கு சென்று தான் கொண்டு வந்திருந்த கசாப்பு கடை அரிவாளால் இளங்கோவையும், அவரது மனைவி பத்மாவதியும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையிலும் பலமாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரூர் போலீசார் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், தப்பி ஓடிய கசாப்பு கடை உரிமையாளர் கார்த்தியை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.