இயல்பான நிலையில் கலைஞர் -   வெங்கையா நாயுடு நேரில் பார்த்த புகைப்படம் வெளியீடு

kk

திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து கேட்டு அறிய இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சென்றனர்.

காவேரி மருத்துவமனையில் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கலைஞரின் உடல்நிலை குறித்து வெங்கையா நாயுடு கேட்டு அறிந்ததாக செய்திகள் வெளியாகின. இதுவரை பலரும் ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடமே கலைஞரின் நலம் குறித்து கேட்டுச்செல்கின்றனர்.

இந்நிலையில், வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில், கலைஞரை நேரில் பார்த்ததாக குறிப்பிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெங்கையா நாயுடு அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் கலைஞரை நேரில் பார்த்த புகைப்படத்தை திமுக வெளியிட்டுள்ளது. இதில், சுவாசக்கருவிகள் ஏதும் இன்றி இயல்பான நிலையில் கலைஞர் படுத்திருக்கிறார். திமுக தொண்டர்களுக்கு இப்படம் மிகப்பெரும் ஆறுதலையும், மகிழ்ச்சையும் தந்துள்ளது.

kalaignar kauvery hospital panvarilal purohith venkaiya naidu
இதையும் படியுங்கள்
Subscribe