பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதிகூட யாருக்கும் கிடையாது என திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
செய்தியாளர்: திரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல, தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் ஈ.வெ.ரா. சிலைகள் அகற்றப்படும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்து இருப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
ஸ்டாலின்: தந்தை பெரியார் சிலையை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பிஜேபியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். நியாயமாக, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து.
செய்தியாளர்: ஒரு புதிய கூட்டணி அமைக்கும் திட்டத்துடன் உங்களை தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி அவர்களுக்கு திமுக தரப்பில் என்ன தெரிவிக்கப்பட்டு இருக்கிறது? புதிய கூட்டணி இப்போது தேவையா?
ஸ்டாலின்: நேற்று முன்தினம் மம்தா பானர்ஜி அவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அப்போது எங்களுடைய உயர்மட்ட குழுவுடன் விவாதித்து, பதில் சொல்வதாக தெரிவித்து இருக்கிறேன்.
செய்தியாளர்: மூன்றாவது அணி அமைப்பது இப்போது தேவையா?
ஸ்டாலின்: திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதால், உயர்மட்ட குழுவிடம் விவாதித்து பதிலளிப்போம்.
செய்தியாளர்: தமிழகத்தில் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நான் போக்குவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறாரே?
ஸ்டாலின்: தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தமிழ்நாட்டு மக்களும் ஒப்புகொள்ள மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும், அடுத்த ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் அமையப்போகிறது. மக்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.
செய்தியாளர்: காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என நீங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்த நிலையில், 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர்களை மத்திய அரசு அழைத்திருக்கிறதே?
ஸ்டாலின்: நேற்று மாலை தமிழத்தின் துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு, “வரும் 8 ஆம் தேதியன்று சட்டமன்றத்தை கூட்டுவதாக நாங்கள் உங்களிடத்தில் சொல்லியிருந்தோம். ஆனால், திடீரென, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக, நான்கு மாநிலத்தின் அதிகாரிகளை டெல்லியில் இருந்து அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள். எனவே, அந்தக் கூட்டம் 9 ஆம் தேதி முடிந்த பிறகு சட்டமன்றத்தை கூட்டலாமா?”, என்று கேட்டார். அவருக்கு பதிலளித்தபோது, “உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட 6 வாரகாலத்தில் ஏற்கனவே 3 வாரங்கள் முடிந்துவிட்டன. எனவே, இந்தப் பிரச்னையை மேலும் இழுத்தடிப்பதற்காக, ஏமாற்றுவதற்காக செய்யப்படும் நாடகம் இது”, என்று நான் தெளிவாக குறிப்பிட்டேன். ஆனால் அவர், “இல்லை. 9 ஆம் தேதி கூட்டம் முடிந்த பிறகு, அதை பார்த்து விட்டு சட்டமன்றத்தை கூட்டலாம்”, என்று தெரிவித்தார். அதனால் நான் ஏற்றுக் கொண்டேன்.
செய்தியாளர்: நான்கு மாநில பிரச்னையான காவேரி விவகாரத்தில், பிரதமர் கர்நாடகத்தில் பேசும்போது மட்டும் டாப் பிரையாரிட்டி என்று சொல்கிறார், ஆனால் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கவே மறுக்கிறாரே?
ஸ்டாலின்: அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க வேண்டும் என்று திமுக தரப்பில் நாங்கள் தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் வரப்போகிறது. எனவே, அந்தத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டுள்ள பிரதமர் தமிழ்நாட்டு மக்களின் நிலை பற்றி கவலைப்படவில்லை. நேற்று நான் தொலைபேசியில் பேசும்போதுகூட, “நிச்சயமாக அவர் நம்முடன் பேசுவதற்கு அழைக்கப்போவதில்லை”, என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதனால் தான், முதலமைச்சரை நேரடியாக சந்தித்தபோது, “சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும், நாடாளுமன்ற, ராஜ்யசபையின் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வோம் என்று எச்சரிக்கை தெரிவியுங்கள்”, என்று வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் தகுதிகூட யாருக்கும் கிடையாது: மு.க.ஸ்டாலின்
சார்ந்த செய்திகள்
Next Story
'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய்.
— M.K.Stalin (@mkstalin) April 27, 2024
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.
ஆனால்,…
Next Story
'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.
அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.
பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Prime Minister Narendra Modi’s toxic speech is vile and highly deplorable. Fearing public anger against his failures, Modi has attempted to whip up religious sentiments and resorted to hate speech to avoid what seems to be an imminent defeat. Hate and discrimination are the real… https://t.co/MA9OeaVYIi pic.twitter.com/SmM9yHmryT
— M.K.Stalin (@mkstalin) April 22, 2024