Skip to main content

மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

Published on 14/02/2019 | Edited on 14/02/2019
po

 

வழக்கு விசாரணைக்காக  பேராசிரியை நிர்மலாதேவி  ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று அவர் அழைத்து வரப்பட்டார்.  இதையொட்டி வழக்கத்திற்கு மாறாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.  செய்தியாளர்கள் யாரையும் நீதிமன்றத்தின் உள்ளே நுழையவிடாமல் போலீசார் தடுத்துவிட்டனர்.

 

po

 

அதுமட்டுமல்லாமல், வழக்கில் சம்பந்தப்பட்ட முருகன் வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் இந்த வழக்கு விசயமாக முருகனிடம் பேச முற்பட்டபோது கூட, இன்ஸ்பெக்டர் பவுல் பேசக்கூடாது என்று தடுத்துவிட்டார்.  இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன என்று போலீசிடம் கேட்டபோது, இது நீதிமன்றத்தின் உத்தரவு என்று தெரிவித்தனர்.   இது உண்மைதானா என்பதை தெரிந்துகொள்ள, வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன்,   மாஜிஸ்திரேட் சுமதி சாய்பிரியாவிடம் முறையிட்டார்.  இத்தனை கெடுபிடிக்கும் காரணம், நீதிமன்றமோ, தனது உத்தரவோ எதுவும் இல்லை என்று கூறினார்.  மேலும்,  ஏன் இத்தனை கெடுபிடி செய்கிறீர்கள் என்று போலீசாரிடம் கேட்டார்.  ஆனால், அதன் பின்னரும் போலீசார் அராஜகமாக செய்தியாளர்களை நிர்மலாதேவி அருகே சென்றுவிட முடியாதபடி செய்தனர். ’சென்றமுறை விசாரணைக்காக வந்த நிர்மலாதேவி நிருபர்களிடம் வாய்திறந்ததால்  இந்த முறை  இத்தனை கெடுபிடி செய்கிறீர்கள். இது மேலிட உத்தரவா?’என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல மறுத்தனர் போலீசார்.

 

p

 

p


 

p

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு நிலத்தை விற்கமாட்டோம்!’  - தம்பதியர் மீது வழக்கு 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 case was filed against a couple who sold land due to caste differences

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் தமிழ்ச்செல்வன். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் இவர், நில புரோக்கர்கள்  மூலம், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மனைவி சொர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு கிரயம் பேசி முடிப்பதற்காக, ரூ.21000 முன்பணம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, கிரயப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துப் புதிய ஆவணங்களையும் தயார் செய்து, நில புரோக்கர்களுடன் வீரமணி தம்பதியர்  வீட்டுக்குச் சென்று, பத்திரப் பதிவு செய்துகொள்கிறோம் என்று கூறியபோது, “நீங்க என்ன ஜாதி?” என்று தமிழ்ச்செல்வனைப் பார்த்துக் கேட்டுள்ளனர். தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் “நாங்க உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த உங்களுக்கு இடத்தை விற்கமாட்டோம். வெளியே போ.” என்று வீரமணி தம்பதியர் விரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் சென்ற தமிழ்ச்செல்வன், தன்னை ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக புகாரளிக்க, வீரமணி மற்றும் சொர்ணலதா மீது  வழக்கு பதிவாகியுள்ளது.

Next Story

மாவட்ட கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்! அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு! 

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Case filed on ADMK Srivelliputur MLA Manraj
எம்.எல்.ஏ. மான்ராஜ்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த மான்ராஜ் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதே தொகுதிக்குட்பட்ட லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர், விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளார். எம்.எல்.ஏ. மான்ராஜின் மனைவி வசந்தி மாவட்டத்தின் ஊராட்சிக் குழுத் தலைவராக உள்ளார். 

கணேசன், நேற்று வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘நான் விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளேன். எனது வார்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதிக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தேன். இதனால், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசந்தி மற்றும் அவரது கணவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மான்ராஜ் ஆகியோர் எனக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். 

Case filed on ADMK Srivelliputur MLA Manraj
கணேசன்

கடந்த திங்கட்கிழமை என்னை செல்போனில் தொடர்புகொண்ட எம்.எல்.ஏ. மான்ராஜ், ‘டிச. 28ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று பேசினால், கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.எல்.ஏ. மான்ராஜ், அவரது மனைவி வசந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். 

கணேசன் கொடுத்த புகாரை பெற்ற வன்னியம்பட்டி போலீஸார், எம்.எல்.ஏ. மான்ராஜ் மற்றும் அவரது மனைவி மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஆடியோ ஒன்று வெளியாகி அது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பரபரக்கச் செய்துள்ளது. அந்த ஆடியோவில், “செல்வம், உன் வீட்ல ஒருத்தன் வந்திருக்கான் பாத்தியா; உன் வீடு புகுந்து.. உன் வீட்டுக்குள்ளேயே கொலை நடந்திடும். நெட்ல இருக்கிறதலாம் எடுத்து குரூப்புல போடுவதற்கு இவன் யாரு? நான் பேசின ஆடியோவை எடுத்து எல்லா ஏ.டி.எம்.கே. குரூப்புலையும் போட்டிருக்கான். நான் ஆள் அனுப்புறேன்; உன் வீட்ல கொலை நடக்கலானா.. அவன இன்னிக்கு சோலிய முடிக்கல.. இன்னிக்கு உன் வீட்ல கொலை நடக்கும்” என கொலை மிரட்டலும், மிகவும் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது, எம்.எல்.ஏ. மான்ராஜ், கணேசனை மிரட்டிய ஆடியோ என சொல்லப்படுகிறது.