Skip to main content

தற்கொலைக்கு முயன்ற முருகன் குடும்பம்! ஆறுதல் சொன்ன ஈவிகேஎஸ், முத்தரசன்

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
s


மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் நிர்மலாதேவியோடு குற்றஞ்சாட்டபட்ட உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பச்சாமி ஆகியோர் கைது செய்யபட்டு 8 மாதங்கள் ஆனபின்பும் இன்றுவரை ஜாமீன் கொடுக்காத நிலையில் முருகனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் நமக்கு போன் செய்து,   ”நாங்க குடும்பத்தோட சாகப்போறோம் எங்களால் இந்த அதிகார வர்கத்தோடு மோத முடியவில்லை. அரசும் கவர்னரும் நல்லாவே இருக்கமாட்டார்கள். எங்களது சாபம் அவர்களை சும்மா விடாது”என்று போனை வைக்க நாம் அங்கு விரைந்தோம்.

 

அங்கு மிகுந்த விரக்தியில் இருந்த முருகனின் மனைவி சுஜாவோ,  ”அவரை நம்பிதான் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களும் இருக்கிறோம். இப்ப அவருக்கே இந்த நிலைமை. எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியே தலைகாட்ட முடியவில்லை . இப்போது நடப்பது எல்லாமே பொய்யா இருக்கு. அரசு மற்றும் நீதியும் நியாயத்தின் பக்கம் இல்லை என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

 

 சின்ன பிள்ளைக்கு கூட புரியும். நிர்மலாதேவி என் கணவர் முருகனுக்கும்,  ஆராய்ச்சி மாணவர் கருப்பச்சாமிக்குமா மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்திருப்பார்? பல்கலைகழகத்தின் கடைநிலை ஊழியர்களான இவர்களை திருப்திபடுத்தியா பணமும் புகழும் அடையமுடியும்.  அந்த மாணவிகளிடம் தனக்கும் கவர்னர் தாத்தாவுக்கும் உள்ள நெருக்கத்தையும் பல்கலைகழகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களை பற்றியுமே பேசியுள்ள போது எதற்காக என் கணவரை மட்டும் கைது செய்து ஒரு பொய்யான வாக்குமூலத்தை போலிஸே எழுதி அதை பத்திரிக்கைகளுக்கு கொடுக்கவேண்டும். கவர்னர் அவசர அவரமாக சந்தானம் கமிஷன் அமைக்க வேண்டும், நக்கீரன் ஆசிரியரையே கைது பண்ண அரசு தயாராவதும் நிர்மலாவே இது என் வாக்குமூலம் இல்லை என்று சொல்கிறார்.

என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.   இப்படியே இருவரை மட்டும் குற்றவாளியாக்கி சிறைக்குள் வைக்க திட்டம்போடுகிறார்கள். வெளியே விட்டால் பல உண்மைகளை நிர்மலாதேவி போட்டுடைத்துவிடுவார் என்று அவரிடம் யாரையுமே நெருங்க விடுவதில்லை.  என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.  ஒரே மர்மமாக இருக்கிறது என்று தேம்பி தேம்பி அழத்தொடங்க....

அருகில் இருந்த அவரது தந்தை ”ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரைக்கு வருகிறார்.  நாங்கள் காங்கிரஸ் குடும்பம்.  அவரிடம் நியாயத்தை கேட்கவும் உண்மையில் என்னதான் நடந்தது.  ஏன் என் மருமகனை மட்டும் குறிவைக்கிறார்கள்.  எங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லையா என்ற கோபத்தில்தான் என் மகள் குடும்பத்தோடு சாகபோறோம் என்றாள்.  நான்தான் அனைவரையும் சமாதானபடுத்தி உங்களை அழைத்தேன் என்று அவரிடமும் பேசிவிட்டோம்.  அவர் வரசொன்னார் . அதுதான் மதுரை ஏர்போர்ட்டுக்கு போறோம் என்று சொல்ல,  நாமும் கிளம்பினோம் என்னதான் நடக்கிறது பார்க்க.....

 

e

 

அங்கு இவர்களுக்காகவே காத்திருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  ”வாங்கம்மா நான் எல்லாத்தையுமே கேள்விபட்டேன்.  எனக்கும் உங்க ஆதங்கம் புரிகிறது. யாருக்காக நிர்மலாதேவி மாணவிகளுக்கு வலைவீசினாள் என்று அப்பட்டமாகவே தெரிகிறது. அந்த ஆடியோவிலேயே சொல்கிறார் ”கவர்னர் தாத்தா எவ்வளவு நெருக்கம் பார்த்தீங்களா என்று அதுபோதாதா?
இந்த விசயத்தில் கவர்னருக்கு ஏன் இவ்வளவு பதட்டம்” ஆடியோ ரிலீஸான அதே நாள் அவசர அவசரமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த காரணம் என்ன.  ”எங்கப்பன் புதருக்குள்ள இல்ல என்பது போல கவர்னர் இந்த விசயத்தில் அக்கரை எடுப்பதற்கான காரணம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது” 
இதை கட்டாயம் பொதுதளத்தில் கேள்விகள் வைப்பேன் மற்றும் கட்சியில் கலந்து ஆலோசிட்டு உங்களுக்கு உதவ முன்னிற்பேன்.  கவலைபடாமல் போங்க என்று ஆறுதல் சொல்ல.. அங்கிருந்து வெளியே வந்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசனை சந்தித்தனர்.

 

m

 

 முத்தரசன் அவர்களிடம்,   ‘’இதனால் எந்தவித தப்பான முடிவும் எடுத்துவிடாதீர்கள் தற்கொலை இதற்கு தீர்வாகாது. உண்மையை முழுவதும் மறைக்கமுடியாது யாருக்காக இவ்வளவு வேலையும் நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்  மேகதாது பிரச்சனையில் கூட ஏன் ஜாமின் கொடுக்க இவ்வளவு தாமதபடுத்துகிறார்கள் என்று பேசியிருக்கிறேன்.,”தமிழக அரசு நியாயமான விசாரனையை நடத்தாது. அதிகாரம் மத்தியில் இருக்கிறது.  தமிழக அரசு ஒன்றும் செய்யாது. இதில் கவர்னரும் அவரின் உதவியாளர் ராஜகோபாலும் சம்மந்தபட்டிருக்கிறார்கள்.  

                                                                                                                                                                                                   இதை ஆணிதரமாக சொல்வேன்.  பயபடாமல் போங்க கம்யூனிஸ்ட் கட்சி நியாயத்தின் பக்கம் கட்டாயம் நிற்கும்.  நக்கீரன் இதை தொடர்ந்து செய்திவெளியிடுவதால்தான் எங்கே நம்ம குட்டு வெளியே தெரிந்துவிடுமே என்ற கோபத்தில்தான் நேரடியாக கவர்னரின் அதிகார அழுத்தத்தால்தான். எல்லோரும் சட்டம்124ன் படி கைது பண்ணமுடியாது என்று உயர் அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் அவரை கைது செய்து அசிங்கபட்டார் கவர்னர்.  சீக்கிரம் நிர்மலாதேவி விசயத்தில் பெரியமனிதர்களின் முகம் வெளியே வரும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது’’ என்று ஆறுதல் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

'மீண்டும் பாஜக வந்தால் நாடு அடிமை நாடாக மாறிவிடும்'-முத்தரசன் பேச்சு 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'If the BJP comes again, the country will become a slave country' - Mutharasan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் பேசுகையில்,''அரசியலமைப்பு சட்டம் தான் நாட்டை வழி நடத்துகிறது. அந்த அரசியலமைப்பு சட்டம் இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் குறிப்பிடுவது போல இது ஒரு தேர்தல் திருவிழா அல்ல. இது ஒரு தேர்தல் யுத்தம். ஒவ்வொரு நாளும் நம்முடைய இந்தியா படை முன்னேறிக் கொண்டே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்திற்கு, அரசியலமைப்பு சட்டம் அமைத்து தந்திருக்கிற அமைப்புகளுக்கு எதிராக, மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிராக, பாசிச கொள்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு அமைப்பை எதிர்த்து நடத்திக் கொண்டிருக்கிற யுத்தம் இது.

என்னை பொறுத்தமட்டில் 40 தொகுதிகளிலும் நம்முடைய கூட்டணி மகத்தான வெற்றி பெற்று விட்டது. வாக்குகளை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். எதிர்த்து நிற்கிற பாஜக, அதிமுக கூட்டணிகள் நிராகரிக்கப்பட்டு, வைப்புத் தொகையை இழக்க செய்ய வேண்டும்.

அரசியல் அமைப்புச் சட்டம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை அமைத்து கொடுத்துள்ளது. இந்த அமைப்புகள் எல்லாம் யாருடைய உத்தரவுக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகள். ஆனால், இன்றைக்கு சுதந்திரமாக செயல்படுகிறதா என்கிற கேள்வி எழுகிறது. நாட்டில் வாழுகிற ஒரு கடைக்கோடி மனிதன் பாதிக்கப்பட்டால் அவன் நியாயம் கேட்டு நிற்கிற இடம் நீதிமன்றம். அந்த நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டது. நீதி மன்றமே ஒருவருடைய கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டால், அப்புறம் நீதி எங்கிருந்து பெறுவது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்க வேண்டும். முடிகிறதா? நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் நீதிமன்றம் சென்று பெறவேண்டியதாயிற்று. மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை. ஆனால், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தமாகாவுக்கு சைக்கிள் சின்னம், அமமுகவிற்கு குக்கர் சின்னம் கிடைக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் நேர்மையாக செயல்பட வேண்டும். காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அபராதம் கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் விடுகிறது.

இந்தியாவில் தன்னைத் தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது பிரச்சாரத்தில் மோடி பேசுகிறார். தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பின்னர் திமுக இருக்காது என்கிறார். இது ஒரு ஜனநாயக விரோதமான செயல். இதே ஆபத்து நாளை அதிமுக, தேமுதிக, பாமகவிற்கு வராதா? நரேந்திர மோடிக்கு 10 வருஷமா கச்சத்தீவு குறித்து ஞாபகமே வரவில்லை. இப்போது கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு என்ன காரணம். இது பிரச்சனைகளை திசை மாற்றி விடுவது தான் காரணம். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக இரண்டு கட்சி எதிர்த்து நிற்கிறது. பாமகவின் சமூக நீதிக்கும் பாஜகவுக்கு என்ன சம்பந்தம். அதிமுக ஆதரவு தரவில்லை. தற்போது உறவில்லை விலகிவிட்டோம் எனக் கூறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக நிராகரிக்கப்பட வேண்டும். பாஜகவிற்கு  மூன்றாவது முறை வாய்ப்பு அளித்தால் நாடு அடிமை நாடாக மாறிவிடும்  . நாடு முழுவதும் இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது'' என்றார்.