Skip to main content

தர்காவில் நிர்மலாதேவி தலைவிரி தாண்டவம்! -அலறும் அருப்புக்கோட்டை!

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுத்து,  ‘காமாட்சி அம்மன்’ தனக்குள் இறங்கியிருப்பதாகக் கூறி, கண்களை மூடி தியானிப்பதுபோல் ஏதேதோ செய்து, தன்னை மாட்டிவிட்ட கல்லூரி மாணவிகள் இறந்துவிட்டார்கள் என்றெல்லாம் பொய் பேசி, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டதுபோல் நடந்துகொண்டார் நிர்மலாதேவி. அதனைத் தொடர்ந்து,  தான் வந்த டாக்சியில் அருப்புக்கோட்டை சென்றுவிட்ட அவரிடம், வழக்கறிஞர் ஒருவர் “உன் கணவரிடம் பேசு..” என்று தன்னுடைய மொபைலைக் கொடுத்திருக்கிறார்.

 

n

 

அந்த செல்போனைக் கையில் வாங்கிய நிர்மலாதேவி,  இரண்டு தடவை தரையில் அடித்ததால், ‘டெம்பர் கிளாஸ்’ உடைந்துவிட்டது.  அதனைத் தொடர்ந்து, மொபைல் கடையில் தரையில் அமர்ந்து, கோர்ட்டில் நடந்துகொண்டது போலவே கண்களை மூடி முனக ஆரம்பித்திருக்கிறார்.  அவரை அங்கிருந்து கிளப்புவதற்குள், அந்த மொபைல் கடை ஊழியர்கள் படாதபாடு பட்டனர். அதன்பிறகு, தான் ஓட்டிவந்த டூ வீலரை எடுக்காமல் அங்கேயே விட்டுவிட்டு,  தன் இஷ்டத்துக்கு சாலையில் அங்குமிங்குமாக நடந்து போனார். தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு, சாலையில் கிடந்த காகிதங்களை அவர் பொறுக்கிட, மக்கள் அவரை பீதியுடன் பார்த்திருக்கின்றனர்.  

 

i

 

இந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்ட நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டி  ‘விவகாரத்து வழக்கு தொடர்ந்துவிட்டதால், ரத்த சொந்தம் என்ற முறையில்,  அவரை மனநல மருத்துவமனையில் சேர்ப்பதற்குக்  கையெழுத்துப் போடக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன். யாராவது நிர்மலாதேவிக்கு உதவ முன்வந்தால், பணம்கூட செலவழிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தனக்கு நெருக்கமான ஒருவரிடம் பரிதவிப்புடன் கூறியிருக்கிறார். 

 

i


நிர்மலாதேவியோ அடுத்தகட்ட ரகளையாக, இரவு 9 மணியளவில்,  அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தர்காவுக்குச் சென்று, தனக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி, மந்திரிக்க வேண்டும் என்று உறுமியிருக்கிறார். அங்கு தலைவிரி கோலமாகத் தலையைச் சுழற்றியபடியே அவர் முட்டிக்கொண்டிருக்க..   காவல்துறைக்குத் தகவல் போனது. பெண் காவலர்கள் இருவர் வந்து நிர்மலாதேவியை இழுத்துச் சென்றனர். 

 

இன்னும் என்னென்ன பண்ணப் போகிறாரோ நிர்மலாதேவி?

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலாதேவிக்கு மீண்டும் பிடிவாரண்ட்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசி தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில், அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி பரிமளா.
 

Warrant Again for Nirmaladevi

 

ஏற்கனவே ஒருதடவை, அதாவது கடந்த நவம்பர் 18-ஆம் தேதி நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் பெற்று வெளிவந்தார் என்பதும், அவர் சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இந்த வழக்கிலிருந்து விலகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரான நிலையில், இவ்வழக்கு பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

 

Next Story

நிர்மலாதேவி வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும்! -விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் வழக்கின் சாட்சியான அக்கல்லூரியின் செயலாளர் ராமசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள்.

 

Nirmaladevi to be prosecuted in a different state! Petition to Supreme Court soon


கல்லூரியின் செயலாளர் ராமசாமி அரசு தரப்பினரால் மூடிய அறையில் விசாரிக்கப்பட்டார். நிர்மலாதேவியை அரசு தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனுவை விசாரித்த நீதிபதி 27-ஆம் தேதி வரை குறுக்கு விசாரணை செய்ய தடை விதித்தார். இவ்வழக்கில் வரும் 27-ஆம் தேதி மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது அந்நீதிமன்றம்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் –

 

Nirmaladevi to be prosecuted in a different state! Petition to Supreme Court soon

 

“இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்தால் பேராசிரியர் நிர்மலாதேவிக்கு தண்டனைதான் கிடைக்கும். நிர்மலாதேவி வழக்கு சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 1 முதல் 32 சாட்சிகளை படம் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், நிர்மலாதேவி குறித்து செய்தியாளர்கள் செய்தி வெளியிட தடையில்லை என்று தெரிவித்தார். நிர்மலாதேவி வழக்கில் தமிழக ஆளுநரும் அமைச்சர்களும் தொடர்பில் உள்ளதால், நிர்மலாதேவிக்கு நியாயம் கிடைக்காது என்பதாலும், தண்டனைதான் கிடைக்குமென்று கருதுவதாலும் வேறு மாநிலத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இன்னும் ஒருசில தினங்களில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்.” என்றார்.