Skip to main content

தொடரும் நீட் மோசடிகள்! - தமிழக மாணவர்களை ஏமாற்றும் சி.பி.எஸ்.இ.!

Published on 05/06/2018 | Edited on 05/06/2018

இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு மே 6ஆம் தேதி நடந்துமுடிந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், தேர்வு எழுதச்சென்ற மாணவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.  நீட் தேர்வுக்காக தமிழ் மொழியில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில், 49 கேள்விகளில் மொழிபெயர்ப்புப் பிழைகள் இருப்பதாக என்.ஜி.ஓ. நிறுவனம் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது. ’டெக் ஃபார் ஆல்’ என்ற இந்த என்.ஜி.ஓ. நிறுவனம் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் நீட் தமிழ் வினாத்தாள்களில் இருக்கும் பிழைகளைச் சுட்டிக்காட்டியது. 

 

neet

 

இந்த நிறுவனத்தை நடத்திவரும் ராம்பிரகாஷ் அப்போதே என்.சி.இ.ஆர்.டி. குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதுமட்டுமின்றி, சி.பி.எஸ்.இ.யின் அலட்சியத்தால் நிகழ்ந்த இந்தப் பிழைகளுக்கு, கிரேஸ் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
 

நேற்று நாடு முழுவதும் நீட் முடிவுகள் வெளியாகின. தமிழகத்தைச் சேர்ந்த கணிசமான மாணவர்கள் தங்களது மருத்துவர் கனவை இழக்கும்வகையில் இருந்தது அந்த முடிவு. இந்நிலையில், நீட் தேர்வில் மொழிபெயர்ப்புப் பிழைகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ‘டெக் ஃபார் ஆல்’ நிறுவன தலைவர் ராம்பிரகாஷ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 
 

neet

 

மே 4ஆம் தேதி நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான பட்டியலை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. ஆனால், நேற்று தேர்வு முடிவுக்கு பிறகான மாணவர்கள் பட்டியலில் மிகப்பெரிய மாற்றம் இருந்தது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் 30ஆயிரம் மாணவர்கள் எண்ணிக்கை வித்தியாசப்பட்டது என குற்றம்சாட்டினார். 
 

மேலும், பிழையான கேள்விகளுக்கு கிரேஸ் மதிப்பெண் கேட்பது தொடர்பாக பேசிய அவர், ஒரு கேள்வி ரூ.ஆயிரம் வீதம் 49 கேள்விகளுக்கு ரூ.49ஆயிரம் செலுத்தி, மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்கலாம். அதேசமயம், நீட் தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் என யாரும் இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகமுடியாது. எனில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீதிமன்றத்தை அணுகும் வாய்ப்பும் கிடையாது. எந்தவகையிலும் இது நியாயமானது அல்ல என ஆதங்கமாக பேசியுள்ளார்.
 

செய்தியாளர் : சி.ஜீவாபாரதி 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.