Skip to main content

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவர் உட்படப் பல பெண்களிடம் பழகி வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞா்!

Published on 25/04/2020 | Edited on 25/04/2020


பொள்ளாச்சி பாணியில் வசதி வாய்ந்த பெண்களிடம் நெருங்கிப் பழகி அதை வீடியோவாக எடுத்து கடைசியில் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த நாகா்கோவில் கணேசபுரத்தைச் சோ்ந்த சுஜி என்ற காசி குறித்து சென்னையைச் சோ்ந்த பெண் டாக்டா் ஒருவா் கன்னியாகுமரி எஸ்பி ஸ்ரீநாத்-க்கு இ-மெயிலில் புகார் அனுப்பியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் கோட்டார் போலீசார் சுஜியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

nagercoil - young man


சுஜியின் தந்தை தங்கபாண்டியன் நாகா்கோவிலில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். பள்ளியில் படிக்கும்போதே பெண்களுக்கு காதல்வலை வீசி பழகிபோன சுஜி, நாளடைவில் அதைத் தொழிலாக வைத்து கொண்டு பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தான். இதற்காக ஆயுதமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கைத் தொடங்கி பயன்படுத்தினான்.
 

சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சுஜி பல்வேறு பெயா்களில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணக்கை வைத்து கொண்டு அதில் தொடா்பை ஏற்படுத்தும் வசதியான பெண்களை செலக்ட் செய்து அவா்களிடம் தன்னுடைய அன்பான பேச்சால் அவா்களுடைய இதயங்களில் இடம் பிடித்து நெருங்கிப் பழகி, கடைசியில் தன்னுடைய நெருக்கத்தை ஓட்டல் அறைகளில் முடித்து அதை வீடியோவாகவும் எடுத்து விடுவார். 
 

http://onelink.to/nknapp

 

இப்படித் தான் பெண் மருத்துவா் ஒருவா் சுஜியின் இன்ஸ்டாகிராமில் விழுந்து அவனுடன் நெருங்கிப் பழகியுள்ளார். தன்னை ஒரு பெரும் தொழிலதிபா் எனக் காட்டி கொண்ட சுஜி, அந்தப் பெண் மருத்துவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவருடன் தன்னுடைய தேவைகளை எல்லாம் முடித்து கொண்டு பல லட்சங்களையும் பல தருணங்களில் வாங்கியுள்ளான்.
 

இந்த நிலையில் ஒரு நாள் அந்தப் பெண் மருத்தவா் சுஜியின் செல்போனை பார்த்துள்ளார். அதில் உள்ள போட்டோக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். செல்போனில் தன்னுடன் நெருங்கிப் பழகியதை போல் 50-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகிய புகைப்படங்களும் அவா்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களும் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் மருத்துவா் சுஜியுடன் தகராறு செய்து பேச்சை நிறுத்திக்கொண்டார். 
 

இதையடுத்து சுஜி, அந்தப் பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு தன்னுடன் இருந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளான். இதனால் அந்தப் பெண் மருத்துவா் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதையடுத்து தான் 24-ம் தேதி அந்தப் பெண் மருத்துவா் வழக்கறிஞா் புருஷோத்தமன் மூலம் கன்னியாகுமரி எஸ்.பி.க்கு இ-மெயில் மூலம் அனுப்பிய புகாரின் பேரில் போலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனா். இது குறித்து கோட்டார் போலீசார் கூறும்போது, சுஜி என்ற காசி மீது ஐபிசி 354, 354 சி, 354டி, 385, 420, 66 ஏ, 66இ, 67 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் ஏராளமான வசதியான பெண்களை ஏமாற்றி லட்சக் கணக்கில் பணம் பறித்து வீடியோவும் எடுத்துள்ளான். இதை இவன் தனியாக மட்டும் செய்ய வில்லை. நண்பா்கள் சிலா் இதில் தொடா்பு இருப்பதாகத் தெரிகிறது. அவனுடைய செல்போன் மூலம் தொடா்பில் இருப்பவா்களைக் கண்டுபிடிக்க முடியும் என்றார். இந்த விவகாரம் பெள்ளாச்சி பாலியல் போல் தொடரும் என்கின்றனா்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.