Skip to main content

காசிக்கு ஆஜராக மாட்டோம் என தீர்மானம்! நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் அதிரடி!

Published on 14/05/2020 | Edited on 16/05/2020
dddd

                              நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ்


பள்ளி, கல்லூரி மாணவிகள், பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்கள், குடும்பப் பெண்கள் போன்றோரை நாசப்படுத்திய நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசிக்கு, ''பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர், தாங்கள் யாரும் அந்த குற்றவாளிகளுக்கு ஆஜராக மாட்டோம் என சொன்னது போல நாகர்கோவிலும் வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும்'' என்றும், ''பெண்கள் விஷயத்தில் இதுபோன்று நடந்து கொண்டால் அதற்கு ஒரே தண்டனை தெலங்கானாவில் நடந்ததுபோல என்கவுண்டர்தான் இதற்கு ஒரே வழி, அப்படி நடந்தால்தான் இனிமேல் இதுபோன்ற சம்வங்கள் நடக்காது''  என சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதைத்தான் நாமும் வெளிப்படுத்தியிருந்தோம். 
 

''பொள்ளாச்சி போலவே நாகர்கோவிலிலும்!'' என்ற தலைப்பில் நக்கீரன் யூடியூப் சேனலில், மக்களின் குரலாக ''பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினரைப்போலவே நாகர்கோவில் வழக்கறிஞர்களும் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டோம்.

 

இந்த நிலையில் ''நாகர்கோவில் வழக்கறிஞர்கள் பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் போல செயல்பட வில்லை என்று தன் ஆதங்கத்தை நக்கீரன் வெளிப்படுதியிருந்தது. நக்கீரன் எண்ணியதைப்போல நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது'' என நாகர்கோவில் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேஷ், ''நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவர் மீது பெண்களை ஏமாற்றுதல், ஆபாச படம் எடுத்து இணையத்தில் வெளியிடுதல், பெண்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்குகள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. காசியின் செயல்கள் மனித குலத்திற்கே எதிராக இருப்பதால் அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். இதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு வழக்கறிஞரும் காசிக்கு ஆஜராக மாட்டர்கள் என தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.                                                                        

 

ggg

                                                                    சுஜி என்ற காசி

மேலும் ''காசிக்கு நாங்கள் யாரும் வாதாட மாட்டோம். இதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்தவர் வழக்கறிஞர் மகேஷ் என நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். நக்கீரன் எடுத்த முயற்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

உரிய மருத்துவம் அளிக்கவில்லை.. அரசு மருத்துவமனை முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Published on 31/12/2023 | Edited on 31/12/2023
Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பாரத்பாபு. இவர், ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 22.ந் தேதி முதுகு வலி காரணமாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக உரிய மருத்துவம் அளிக்காமல் பணியிலிருந்த மருத்துவர் பிரவீன்குமார், உடன் இருந்த உறவினர்களுக்கு எந்தவித நோய் குறித்த தகவலையும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.  

இந்நிலையில், 5 நாட்களுக்கு பிறகு கடந்த 29.ந் தேதி பணியிலிருந்த மருத்துவர், வழக்கறிஞரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் எனவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்ற சில மணி நேரத்தில் வழக்கறிஞர் பாரத்பாபு உயிரிழந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ஆம்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு நான்கு நாட்களாக உரிய மருத்துவம் அளிக்காமல் உறவினர்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் அலைக்கழித்து வந்த மருத்துவர் பிரவின்குமாரை கண்டித்து அவரை கைது செய்யக் கோரி அரசு மருத்துவமனை முன்பு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

பின்னர் அங்கு வந்த காவல்துறையினரிடம் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக மருத்துவ அலுவலரிடம் புகார் அளிக்க சென்ற போது, அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் இல்லாததால் மருத்துவ அலுவலர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் வந்த பணி மருத்துவர் யோகேஸ்வரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுக்கு முறையான பதில் அளிக்காததால் அங்குப் பணி மருத்துவரிடம்  வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டி.எஸ்.பி. சரவணன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Not providing proper medicine.. Lawyers struggle in front of government hospital

இது தொடர்பாக வழக்கறிஞர் மதிவண்ணன், அரசு மருத்துவமனையில் சாதாரண முதுகு வலிக்காக சேர்க்கப்பட்ட வழக்கறிஞருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் நான்கு நாட்களாக காலம் தாழ்த்தி உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர் பிரவீன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் எனவும், அரசு மருத்துவமனைகளில் தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு எந்த நிலையில் உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய  அவர் வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பாமர மக்களுக்கு எந்த அளவில் மருத்துவம் பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

Next Story

கனல் கண்ணனால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு; வாக்குவாதத்தில் இந்து முன்னணி

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Kanal Kannan in nagarkovil S.P. office;

 

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனுடன் சில கருத்துகளையும் பதிவிட்டிருந்தார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், கனல் கண்ணன் கிறிஸ்துவ மதத்தை அவமதித்தாகக் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக வந்திருந்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கனல் கண்ணன் எஸ்.பி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அவரைத் தடுத்த காவல்துறையினர், விசாரணை முடியும் வரை எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

 

அப்போது, எஸ்.பி அலுவலகத்தின் வெளியே இருந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கனல் கண்ணன் தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், விசாரணை முடியும் முன் வெளியே செல்ல அனுமதி கிடையாது என கண்டிப்பு காட்டிய காவல்துறை, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.