Skip to main content

மீண்டும் பொய் பேசிய மோடி! - குட்டு வைத்த நேருவின் சுயசரிதை!!

Published on 11/05/2018 | Edited on 11/05/2018

பா.ஜ.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் என்று சொல்லப்படும் பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரங்களில் வாக்குவங்கியைக் குறிவைத்து சொல்லும் பொய்களுக்கு எல்லையில்லாமல் போய்விட்டது என சாமான்யர்களும் சொல்லும் நிலை வந்துவிட்டது. குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தன்னைக் கொல்ல பாகிஸ்தான் சதி இருக்கிறது எனச் சொல்லிவிட்டு, பின் அதைப்பற்றி வாயே திறக்காமல் இருந்தவர் பிரதமர் மோடி.

modi

 

 

நடக்கவிருக்கும் கர்நாடக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதேபோல பல இடங்களில், தனது வாய்க்கு வந்தவ இராணுவத் தளபதி திம்மய்யாவை அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவமதித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். ஆனால், 1948ஆம் ஆண்டு கே.எம்.கரியப்பாதான் இந்திய இராணுவத்தின் தளபதியாக இருந்தார் என்ற உண்மையை பலரும் போட்டுடைக்க, அதைப்பற்றி மோடி உட்பட யாருமே வாய்திறக்கவில்லை.

 

இந்நிலையில், மே 9ஆம் தேதி கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பகத்சிங், படுகேஷ்வர் தத் மற்றும் வீர் சவார்கர் ஆகியோரை எந்த காங்கிரஸ் தலைவர்களும் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால், ஊழல் செய்து சிறையில் இருப்பவர்களை காங்கிரஸ் தலைவர்கள் சென்று பார்க்கத் தவறியதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். 

 

Nehru

 

மோடியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையானதுதானா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அந்தக் கேள்விக்கு முன்னாள் பிரதமர் நேருவே தனது சுயசரிதையில் பதிலளித்திருக்கிறார். 1929ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குண்டுவீசிய வழக்கில் பகத்சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ‘லாகூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகத்சிங், ஜதீந்திரநாத் தாஸ் உள்ளிட்ட பலரை சிறைக்கு நேரில் சென்று சந்தித்தேன். பகத்சிங்குடன் உரையாற்றினேன்’ என நேரு எழுதியிருக்கிறார். 

 

Nehru

 

 

இதை உண்மையாக்கும் விதமாக ஆகஸ்ட் 9, 10 தேதிகளில் வெளிவந்த தி ட்ரிப்யூன் நாளிதழும் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில் ஜவஹர்லால் நேரு மற்றும் கோபி சந்த் ஆகியோர் லாகூர் சிறைக்கு சென்று பகத்சிங் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Nehru

 

வரலாற்று நிகழ்வுகளை சற்றும் தெரிந்துகொள்ளாமல், மேடையில் நிற்கும்போது வாய்க்கு வருவதைப் பேசிவிடுகிறார் மோடி. சின்னச்சின்ன வரலாற்று நிகழ்வுகள் கூட தெரியாதவராக அவர் இருக்கிறார். மோடியின் இந்தப் பொய்ப்பிரச்சாரங்களை தற்செயலானவை என்று ஏற்றுக்கொள்ளமுடியாது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மோடியிடம் இந்தமுறையும் பதில் கிடையாது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.