Skip to main content

மு.க.ஸ்டாலின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு: அமைச்சர் ஜெயக்குமார்

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

 

மு.க.ஸ்டாலின் சொல்லும் சில கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், 

நடிகர் கமல்ஹாசன் ஒரு தலைவருக்கு உள்ள முதிர்ச்சி இல்லாமல் நடந்து கொள்கிறார். அவரது பேச்சு பலருக்கு புரியாது. கட்சி நடத்துவதற்கான அனுபவமும் இல்லை. அவர் காலையிலேயே பள்ளிக்கூடம் சென்று வருகிறார். பள்ளிக்கூடம் என்பது அரசியல் செய்வதற்கான இடம் கிடையாது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பள்ளிக்கூடத்துக்கு சென்றா அரசியல் நடத்தினார்? 6½ கோடி தமிழ் மக்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்தனர். புரட்சித்தலைவி அம்மா எம்.ஜி.ஆரை பின்பற்றி திட்டங்களை முன்னெடுத்து சென்றார். அவர் மாபெரும் தலைவராக இன்றைக்கும் மக்கள் மத்தியில் விளங்குகிறார். பள்ளிக்கூடத்துக்கு காலை 7.30 மணிக்கு சென்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் தான்.

கேள்வி:- ஆட்சியாளர்கள் வாக்குறுதிதான் கொடுக்கிறார்கள். எதையும் நிறைவேற்றுவது கிடையாது. இதை கேட்டால் திசை திருப்புகிறார்கள் என்று கமல் மீண்டும் குற்றம் சாட்டி உள்ளாரே?

பதில்:- காய்ச்சமரம்தான் கல்லடிப்படும் என்பார்கள். இன்றைக்கு எங்களை எதிர்த்தால்தான் அவர்கள் வெளியே தெரிகிற அளவுக்கு நிலைமை. அதனால் வேறு வழி இல்லாமல் எங்களை எதிர்க்கிறார்கள். இல்லையென்றால் அவர்களை யாருக்கும் தெரியும். பொத்தாம் பொதுவான கருத்தை சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. எதையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். திட்டங்களில் குறை சொன்னால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் புரியாத மொழியில் சொல்லி விமர்சிக்கிறார். அவர் சொல்வது யாருக்கும் புரியவில்லை. இப்படி பேசுவதை காழ்ப்புணர்ச்சி என்று கருத முடியும். அவரது பேச்சு ஆக்கப்பூர்வமான கருத்தை காட்டுவதாக இல்லை.

எங்களுக்கு பரம எதிரி தி.மு.க. ஆனால் மு.க.ஸ்டாலின் சொல்லும் சில கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. இவர்கள் எல்லோரும் வெறும் காகிதப்பூ என்று ஸ்டாலின் சொன்னதில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. உண்மையில் இவர்கள் எல்லோரும் காகிதப் பூக்கள்தான். நிச்சயமாக இந்த காகித பூ மனமும் வீசாது. மலரவும் மலராது. வெறும் காகித பூவாகத்தான் இருக்கும். விதை கூட மரபணு மாற்றப்பட்ட விதை. இந்த விதை யாருக்கும் பயன்படாத விதை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பாதை சரியானதே - இன்னும் வேகமாய் நடைபோடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
The path is right let's walk faster CM MK Stalin

தமிழக மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இன்று (12.03.2024) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மாநில திட்டக்குழுவில் கடந்த நான்கைந்து மாதங்களில் நாம் மேற்கொண்ட ஆய்வுப் பணிகள் குறித்த மொத்தம் 11 அறிக்கைகள் வழங்கியிருக்கிறோம். அந்த அறிக்கைகளை நான்கு வகைப்படுத்தலாம். ஒரு வகை என்னவென்றால் அரசின் திட்டங்கள் எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதற்குண்டான அறிக்கையை அரசுக்கு அளிப்பது. பொதுவாக அரசின் திட்டங்கள் அது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஆய்வு. அதற்குப் பிறகு அரசு மாறி வரும் கால சூழலில் என்னவெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பயனாளிகள், பயனாளிகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி முதல் ஆய்வு ஆகும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயிற்றுப் பசியுடன் வரும் குழந்தைக்கு அறிவுப்பசி எங்ஙனம் ஏற்படும்? துடைத்தெறிவோம் அப்பசியை நாளைய தலைமுறை நலமாக என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கொண்டு வந்தோம். மாணவர்களின் வருகை அதிகரிப்பு, குடும்பத் தலைவிகளின் பணிச்சுமைக் குறைப்பு என அதன் பலன்களை இன்று மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவரும், பொருளாதார அறிஞருமான முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அடுக்கடுக்காய்ப் பட்டியலிட்டபோது, நம் பாதை சரியானதே - இன்னும் வேகமாய் நடைபோடுவோம் என்ற உற்சாகம் பிறந்தது” எனக் குறிப்பிடுள்ளார்.  இதற்கான காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.

அதில், “காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிக்கூடங்களில் 100 சதவிகித சேர்க்கைக்கு வந்துவிட்டோம். புதிதாக சேர்ப்பது என்பது பெரிய விஷயம் கிடையாது. இப்போது என்ன பிரச்சனை என்றால், வருகைப் பதிவு என்பது முன்பு 60 சதவீதம். 70 சதவீதம் சாதாரணமாக இருக்கும். காலை உணவுத் திட்டம் வந்த பிறகு, சாதாரணமாக 90 முதல் 95 சதவீதம் ரொம்ப சுலபமாக இருக்கிறது. இரண்டாவதாக, பள்ளிக் குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்கு போகமாட்டேன் என்று அடம் பிடிப்பதில்லை. குழந்தைகள் 9 மணிக்கு பள்ளிக்கூடம் என்பது தற்போது 7.30 மணி முதல் 8 மணிக்குள் பள்ளிக்கூடம் செல்வது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவதாக, குழந்தைகள் காலை உணவை விரும்பி சாப்பிடுவதாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆசிரியர்கள் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால், குழந்தைகள் மிகவும் சோர்வாகவும், மயக்கத்தோடும் தற்போது எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள், பள்ளிக்கூடத்தில் தரும் உணவு போல ஏன் வீட்டில் தருவதில்லை என்று பெற்றோர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். பெற்றோர்கள், குழந்தைகள் அதை சொல்வதாக சொல்கிறார்கள். 

The path is right let's walk faster CM MK Stalin

இதற்கு முன்பு ஒரு ஆய்வு செய்தோம். அதனுடைய தாக்கம் எப்படி இருந்தது என்றால் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் வருகைப் பதிவு அதிகரிப்பது என்பது அந்த தரவிலிருந்து தெரிகிறது. அதையும் மாநில திட்டக் குழுவின் மூலமாக ஆய்வு செய்து கூறினோம். தற்போது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக தாய்மார்களிடம் இருந்து பெரிய வரவேற்புப் பெற்றிருக்கிறது. காலை எழுந்தவுடன் குழந்தைகளை எழுப்பி, சாப்பாடு வழங்கி அவர்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது என்பது ஒரு தனி வேலை. அந்த வேலையிலிருந்து பெரிய அழுத்தத்திலிருந்து விடுதலை ஆகிவிட்டோம் என்பது பெற்றோர்கள் கூறும் கருத்து. இரண்டாவதாக, குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு சந்தோஷமாக செல்கிறார்கள். இவை இரண்டும் தான் மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டிய கருத்து. மூன்றாவதாக, குழந்தைகள் சாப்பிட்டார்களா, சாப்பிடவில்லையா என்பது பெற்றோர்களின் கவலையாக இருந்தது. இப்போது அந்த கவலை இல்லை என்று சொல்கிறார்கள். தற்போது, நிம்மதியாக இருப்பதாக கூறுகிறார்கள். இவையெல்லாம் ஆய்வு செய்ததிலிருந்து கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'மு.க. ஸ்டாலின் குழப்பவாதி'- அமைச்சர் ஜெயகுமார் தாக்கு!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, திமுக குழப்பமான கட்சி. அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் குழப்பவாதி என்று கூறிய அவர், அந்த குழப்பங்களுக்கு ஸ்டாலினின் முதல்வர் கனவுதான் காரணம் என்று தெரிவித்தார். 

 

Jayakumar about MKStalin

 



மேலும் முதல்வர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், நித்யானந்தா மாதிரி ஒரு புதிய தீவை வாங்கி அங்கு முதல்வர் ஆகி கொள்ளுங்கள், எங்களுக்கு ஆச்சேபனை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் முதல்வர் ஆக முடியாது. தமிழகத்தில் அதிமுகவால் மட்டுமே முதல்வர் ஆக முடியும் என தெரிவித்தார்.