ADVERTISEMENT

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு; வாகனங்களைப் பழுது பார்க்க உதவி எண்கள் அறிவிப்பு

05:53 PM Dec 10, 2023 | prabukumar@nak…

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களைப் பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் 1800 2100 007 என்ற எண்ணிற்கும், யமாஹா வாடிக்கையாளர்கள் 1800 4201 600 என்ற எண்ணிற்கும், டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் 1800 2587 555, ஹோண்டா வாடிக்கையாளர்கள் 1800 1033 434 என்ற எண்ணிற்கும், சுசூகி வாடிக்கையாளர்கள் 1800 1217 996 என்ற எண்ணிற்கும், மாருதி சுசூகி வாடிக்கையளர்கள் 1800 1800 180 என்ற எண்ணிற்கும், லாண்சன் டொயோடா வாடிக்கையளர்கள் 1800 1020 909 மற்றும் 1800 2090 909 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கியா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் 1800 1085 000 என்ற எண்ணிற்கும், ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் 1800 1024 645 என்ற எண்ணிற்கும், டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் 1800 209 8282 என்ற எண்ணிற்கும், டொயொட்டா வாடிக்கையாளர்கள் 1800 102 50001 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், டிவிஎஸ், மாருதி, ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் சிறப்பு முகாம்களை நடத்த உள்ளன. சில நிறுவனங்கள் வாகன பழுதுபார்ப்புக்கு நடமாடும் சிறப்பு குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வாகன பாதிப்பு மதிப்பு 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருந்தால் இழப்பீடு தர காப்பீட்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் புகைப்படங்கள், பழுது நீக்கம் செய்ததற்கான ரசீதுகள் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT