Advertisment

புயல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வானிலை மையம்!

Meteorological Department issued an important announcement about the storm

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் (டிசம்பர் 3 ஆம் தேதி) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 4 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கவுள்ளது. தெற்கு ஆந்திரா - வட தமிழகத்தின் இடைப்பட்ட பகுதியான சென்னைக்கும் தெற்கு ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 'மிக்ஜாம்' புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கு முன்னதாக வெளியிடப்பட்டிருந்த வானிலை முன்னறிவிப்பில், ‘கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை (02.12.2023) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

rain Storm weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe