Advertisment

திமுகவின் போட்டி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது!

திமுகவின் மாதிரி சட்டப்பேரவை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

Advertisment

அண்ணா அறிவாலயத்தில் இந்த மாதிரி சட்டப்பேரவையில் சபாநாயகராக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், இரட்டை இலையில் வெற்றி பெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

முதலில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாதிரி சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 கோடி வழங்கும் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார் மு.க.ஸ்டாலின்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe