Skip to main content

0.01% கூட பலனில்லை!!! பெண் மருத்துவர் மீது இளைஞர் மோசடி புகார்... அதிகாரிகள் ஷாக்!!!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020
Medicine to grow hair - Complain as Fraud

 

 

தலைமுடி வளர மருத்துவம் அளிப்பதாக விளம்பரம் வந்ததை பார்த்து சிகிச்சை எடுத்ததில் 0.01% கூட முடி வளரவில்லை என்றும், தான் இழந்த ரூபாய் 58,000 பணத்தை திரும்ப தர மறுக்கிறார்கள் என்றும், தனக்கு சிசிச்சை அளித்தவர் தலைமுடி நிபுணர் இல்லை, பல் டாக்டர் என்றும் புகார் மனு கலெக்டரிடம் கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர். 

 

திருச்சி காட்டுர் பகுதியை சேர்ந்த மிதுன் என்பவர் மின்சார வாரிய தற்காலிக தட்டச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய தலையின் முன்பகுதியில் முடி வளருவதற்காக சிகிச்சை செய்து கொள்ள விரும்பியுள்ளார். 

 

இந்நிலையில் கலர்ஸ் என்ற உடல் எடை குறைக்கும் தனியார் நிறுவனம் புதிதாக முடி வளர்வதற்கான சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது என்று அறிந்து விளம்பரத்தை பார்த்து திருச்சி சாலை ரோட்டில் செயல்பட்டு வரும் கலர்ஸ் நிறுவனத்தில் சிகிச்சைக்காக 2018 ஆம் ஆண்டு சேர்ந்து 8 தவணையாக சிகிச்சைக்கு சென்றும் எந்த பலனும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ''என்னை பரிசோதித்த மருத்துவர் மஞ்சுளா 12 தவணையாக சிகிச்சைக்கு வர வேண்டும் என்றும், 6வது முறை சிகிச்சைக்கு பிறகு முடி வளருவதில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று கூறினார். ஆனால் 8 வது தவணை சிகிச்சையும் முடிந்துவிட்டது. இதுவரை 0.01% கூட முடி வளரவில்லை. இதுவரை ரூபாய் 58,000 பணம் கட்டியுள்ளேன். எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினேன். அவர்களிடம் எந்த பதிலும் சரியாக வழங்கப்படவில்லை.

 

அந்த நிறுவனம் குறித்து விசாரித்ததில் பல் மருத்துவர் மஞ்சுளா தான் எனக்கு மருத்துவம் பார்த்தார் என்பதை அறிந்த நான் என்னுடைய பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் திருப்பி தர வேண்டும் என்றால் புதிதாக ஒருவரை சேர்த்து விட்டால் தருகிறோம் என்கின்றனர். எனவேதான் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். பலரது வாழ்க்கை இவர்களால் நாசமடைந்துள்ளது. அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டு கொண்டுள்ளார்.

 

இளைஞரின் இந்த புகாரைப் பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தப் புகார் குறித்து கலெக்டர் அலுவலகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் அந்த இளைஞர். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.