Advertisment

மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகாத முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்க்கு பிடிவாரண்ட்

court

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராஜேஸ். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி துவரங்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னக்காளை என்பவர் இறந்து விட்டார். இது சம்பந்தமாக அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் முத்துவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ், மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தார். இது சம்பந்தமான விசாரணைக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ் ஆஜராகாததால் மணப்பாறை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தர்ம பிரபு, பிடிவாரண்ட் பிறப்பித்தும், அவர் மீது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். ராஜேஸ் தற்போது முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

manapparai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe