Skip to main content

22 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சிலை கடத்தலின் முக்கிய குற்றவாளி சஞ்சீவி அசோகன் கைது

Published on 10/03/2018 | Edited on 10/03/2018
silai

 

சிலை கடத்தலின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சஞ்சீவி அசோகனை 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலிசார்.

 

நெல்லை மாவட்டம்,  வீரவநல்லூர் அருகேயுள்ள அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் துவார பாலகர் சிலைகள் கடந்த 1995 ம் ஆண்டு திருடுபோனது. வீரவநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைக்குப்பிறகு கண்டுபிடிக்கமுடியாத வழக்காக மாறியது. 

 

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் சிலைகள் திருடுபோன கோயில்களை ஆய்வு செய்து சிலைகடத்தல் குற்றவாளிகளை கைது செய்துவருகின்றனர் ஐ,ஜி பொன்,மாணிக்கவேல் தலைமையிலான போலிசார்.  அந்த வகையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்ட சஞ்சீவி அசோகனை சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

 

 அவரை இன்று கும்பகோணம் 1-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபவன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசாரிடம் விசாரித்தோம்,"
வீரவநல்லூர் அந்தாளநல்லூர் கோயிலில் திருடுபோன துவார பாலகர் சிலைகள் இரண்டையும் தஞ்சையைச்சேர்ந்த சீத்தாராமையா மும்பையில் உள்ள இந்தோ- நேபாள் ஆர்ட் கேலரியின் உரிமையாளர்களான வல்லபபிரகாஷ்,அவரது மகன்  சூரியபிரகாஷ் ஆகியோரின் உதவியோடு பழுதுநீக்கம் செய்தவற்காக லண்டன் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா எடுத்துச்சென்றுள்ளார்கள்.


தற்போது அங்குள்ள நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது என தெரியவந்துள்ளது.

 

 இரண்டு சிலைகள் மட்டுமின்றி மேலும் ரூ. 60 கோடி மதிப்பிலான 8 சிலைகள் ஆஸ்திரேலியா ஆர்ட் கேலரியில் இருக்கிறது. அவைகள் அத்தனையையும்  மீட்கும் முயற்சியில் உள்ளோம். இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதேபோல ஏற்கெனவே ஆஸ்திரேலியாவிலிருந்து  இதுபோல மேலும்  ரூ. 46 கோடி மதிப்புள்ள சிலைகள், சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் மேடிசன் ஆர்ட் கேலரியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. அது போல் மீட்போம் ," என்றனர்.

 

இந்த வழக்குத் தொடர்பாக  மகாபலிபுரம் பகுதியைச் சேர்ந்த நச்சு (எ) லெட்சுமிநரசிம்மன்,  சென்னை மயிலாப்பூரைச்  சேர்ந்த ஊமைத்துரை, மற்றும் அவரது தம்பி அண்ணாதுரை, மும்பையைச் சேர்ந்த வல்லபபிரகாஷ், அவரது மகன் ஆதித்யபிரகாஷ், சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் என பெரும் சிலைகடத்தல் மன்னன்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்விக்காக சரஸ்வதி எதையும் செய்யவில்லை” - புகைப்படம் வைக்க மறுத்த ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Action taken against teacher who refused to post photo god Saraswati

ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.

அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார். 

Next Story

திருச்செந்தூரில் மக்கள் கடல்; வாளெடுத்து வந்த சூரபத்மனை வேல்கொண்டு வதம் செய்தார் வேல் முருகன்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

Vel Murugan killed Soorapadman who was carrying a sword at Tiruchendur

 

பல்வேறு அவதாரங்களை எடுத்து வந்த மாயாவி சூரபத்மனை கடல் போன்று திரண்டிருந்த மக்களின் முன்னே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என மக்களின் பக்திப் பரவசமெடுக்க வேல் கொண்டு வீழ்த்தினார் செந்தில் வேல் முருகன்.

 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6ம் நாளில் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம்  நேற்று (18-11-23) தேதியன்று நடந்தது. இதனையொட்டி திருக்கோவிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பின்பு 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. ஏற்கனவே கந்தசஷ்டி விழா தொடக்கத்தின்போது ஆலயத்தில் பக்தர்கள் திரளான அளவில் விரதம் மேற்கொண்டனர். 

 

Vel Murugan killed Soorapadman who was carrying a sword at Tiruchendur

 

அன்றைய தினம் அதிகாலையிலேயே ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய யாக சாலையில் 12 மணியளவில் தீபாராதனை நடந்தது. மதியம் ஒரு மணிக்கு மேல் ஜெயந்திநாதர் யாக சாலையிலிருந்த எழுந்தருளியவர் பாடல்கள் முழங்க மேளதாளத்துடன் சண்முகவிலாசம் வந்தடைந்த போது அவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன்பின், பிற்பகல் 2 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதராக அவதரித்த வேலவனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

 

இதன்பின் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிற சூரபத்மனை வதம் செய்வதற்காக மாலை 4 மணியளவில் பக்தர்கள் திரள கடற்கரைக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளினார். கடற்கரையிலோ அலை கடலையும் மறைத்தது மக்கள் தலைகள். ஆரம்பத்தில் கஜமுகன் உருவில் வந்த சூராதிசூரனை வெற்றி கொண்ட ஜெயந்திநாதர், இறுதியில் சுயவடிவாக வந்த சூரபத்மனை மாலை 5 மணியளவில் அன்னை உமையவள் பார்வதி தேவி கொடுத்த சக்தி வேலால் வீரவேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளக்க சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர். 

 

Vel Murugan incident Soorapadman who was carrying a sword at Tiruchendur

 

சூரனை சேவல் கொடியாகவும், மயிலாகவும் தனதாக்கி ஏற்றார் முருகப் பெருமான். சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து சந்தோஷ மண்டபத்திற்கு எழுந்தருளிய வேல் முருகனுக்கு சிறப்பு அகிஷேகம் அலங்காரங்கள் நடந்தேறின. லட்சக்கணக்கில் திரண்ட மக்களின் பாதுகாப்பு பணிகள் தென்மண்டல ஐ.ஜி நரேந்திர நாயர் தலைமையில் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனின் மேற்பார்வையில் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.