Skip to main content

காந்தியின் உருவ பொம்மையை சுடும் இந்துமகாசபை தலைவர்!

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவின் தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றவர் நாதுராம் கோட்சே. இந்துமகா சபையின் முன்னாள் உறுப்பினராக இருந்த அவர், இந்துத்வா குழுக்களோடு இணைந்து இந்தப் படுகொலையை நிகழ்த்தியதாக வரலாறு சொல்கிறது. 
 

Gandhi


 

 

காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளை இந்திய மக்கள் தேசிய தியாகிகள் தினமாக அனுசரிக்கின்றனர். ஆனால், இந்து மகா சபை போன்ற இந்துத்வா குழுக்களைச் சேர்ந்தவர்கள், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமானவர் எனக்கூறி அவரைக் கொன்ற கோட்சேவைக் கொண்டாடுகின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்திருக்கிறது. ஆனால், இது முந்தைய சம்பவங்களையெல்லாம் விட மாறுபட்டு, பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. 
 

உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்து மகா சபை அலுவலகம் இருக்கிறது. இங்கு மகாத்மா காந்தியின் உருவபொம்மையை செய்து வைத்திருக்கின்றனர். இந்த அமைப்பின் தலைவரான பூஜா சகுன் பாண்டே ஒரு பொம்மைத் துப்பாக்கியைக் கொண்டு அந்த பொம்மையை சுடுகிறார். அவர் சுட்டதும் ரத்தம் போன்ற திரவம் காந்தி பொம்மையின் வயிற்றிலிருந்து சிதறி ஓடுகிறது. இதைப் பார்த்து சுற்றியிருப்பவர்கள் உற்சாகமாக கூச்சலிடுகின்றனர். பின்னர் பூஜா சகுன் காந்தி கொல்லப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்விக்கிறார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

இதற்கு முன்னர் பலமுறை காந்தியின் நினைவு தினத்தன்று இந்து மகா சபையினர் கோட்சே சிலைக்கு மாலை அணிவிப்பதும், இனிப்பு தருவதும் வழக்கமாக இருந்து வந்தது. தற்போது, மகாத்மா காந்தியின் பொம்மையை துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. 

Next Story

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Acceptance of religious harmony pledge on behalf of DMK

நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று (30.01.2024) நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அதே போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 28 ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.