Skip to main content

வெட்டுக்கிளிகள் குறித்த அச்சம் விவசாயிகளுக்கு வேண்டாம்! வேளாண் துறை இயக்குனர் பேட்டி!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

Farmers - Director of the Department of Agriculture


கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குறுவை சாகுபடி உழவுப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் மாவட்டத்திலுள்ள பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் களமிறங்கினர். 
 


இதனைத் தொடர்ந்து குமராட்சி ஒன்றியம் கண்டியாமேடு கிராமத்தில் வயல் வெளிக்கு நடுவே விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள குறைகளையும் தேவைகளையும் எடுத்துக் கூறினார்கள். 

அப்போது விவசாயிகள் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து கொடுக்கப்படும் எனவும் விதைகள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள உரக் கிடங்கில் உரம் இருப்பு உள்ளது விவசாயிகள் நடவு பணிகளைச் செய்திட விவசாய டிராக்டர்கள் உள்ளது அதனை உழவன் செயலி மூலம்  விவசாயிகள் முறையாகப்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல் கரோனா  காலங்களில் தற்போது நடவு பணிகள் நடைபெறுவதால் விவசாயிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வயல் வேலைகளைச் செய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
 

 


இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில்,  வருகிற ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதையடுத்து வேளாண்துறை, டெல்டா மாவட்டங்களில் அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் இருப்பு உள்ளிட்டவை விவசாயிகளுக்குத் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 

கடலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இந்த ஆண்டு 41 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 19 ஆயிரம் ஏக்கரில் தற்போது பயிரிடப்பட்டுள்ளது. 17 ஆயிரம் ஏக்கர் நாற்றங்கால் அளவில் உள்ளது. விவசாயிகளுக்கு குடிமராமத்து பணிகள் மூலம் அனைத்து கால்வாய்களையும் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் நல்ல சாகுபடி செய்யவேண்டும். அதேபோல் வெட்டுக்கிளி காற்றின் திசை வேகத்தில் தான் செல்லும் என 'ஜோத்பூர் வெட்டுக்கிளி எச்சரிக்கை மையம்' தெரிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் பஞ்சாப் மாநிலம் நோக்கித்தான் வெட்டுக்கிளிகள் செல்லும் தமிழகம் வர வாய்ப்பு இல்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

http://onelink.to/nknapp


இருந்தாலும் நமது முதலமைச்சர் அறிவுறுத்தல்படி ஜோத்பூர் எச்சரிக்கை மையத்தின் தொடர்பில் இருக்கிறோம் விவசாயிகள் கவலை அடைய வேண்டாம். உழவன் செயலி 6 லட்சம் விவசாயிகள் டவுன்லோட் செய்து வைத்துள்ளனர். இதில் ஒரு விவசாயின் மகனோ, மகளோ, பேரனோ, பேத்தியோ இருந்தாலே போதும் அதனை டவுன்லோட் செய்து தகவல்களை விவசாயிக்குத் தெரிவிக்கலாம். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள மானிய திட்டம், பயிர் காப்பீடு, உரம் இருப்பு, மழை பற்றிய வானிலை அறிக்கை உள்ளிட்டவற்றை இந்த உழவன் செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறினார். காவேரி விவசாய சங்க வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், கிராம விவசாயிகள் உள்ளிட்ட வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.