ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில் நகர்ப்புறங்களில் தேர்தல் நடத்தாமல் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இருப்பினும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (02.01.2020) எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.