Skip to main content

கம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை... சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார்...

Published on 22/01/2019 | Edited on 23/01/2019
lenin


 

நெல்லையில் உடையார்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது, சிபிஎம்-இன் மாவட்ட அலுவலகம். அதன் முன்னே கம்பீரமாக மேல்கோட் பறக்க 12 அடி உயரம் கொண்ட லெனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கம்பீரமாக நிற்கும் இந்த சிலையை தமிழகத்தின் தலைசிறந்த சிற்பி டாக்டர் சந்துரு வடிவமைத்துள்ளார். அவருக்கு உதவியாக காத்தப்பன் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக செயல்பட்டுள்ளனர். இச்சிலையை திறப்பதற்கு சிபிஎம்-இன் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி நெல்லைக்கு மதியமே வந்தார். மாலை ஐந்து மணியளவில் நடந்த சிலை திறப்பு விழாவில் சிபிஎம்-இன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மத்திய கமிட்டி உறுப்பினர் வாசுகி மற்றும் சம்பத் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். 
 

தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிபிஎம்-இன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். மாலை ஆறு மணியளவில் லெனினின் மாபெரும் சிலையை சீதாராம் யெச்சூரி திறந்து வைத்தார். அப்போது திரண்டிருந்த தோழர்கள் கரவொலி எழுப்பினார்கள். நான்கு அடி உயரம்கொண்ட லெனின் சிலை பீடத்தில் லெனினின் மார்க்ஸிய சித்தாந்தம் பொறிக்கப்பட்டிருந்தது.


 

seetaram




சிலையைத் திறந்தபின் சீதாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவரின் உரைவீச்சில் மோடி அரசின் கொள்கை பற்றிய எதிர்ப்பு வெளிபட்டது. யெச்சூரி பேசியதாவது...

இன்றைக்கு எதிர்கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு ஒற்றை மனிதனை எதிர்பதற்காக கூடியுள்ளார்கள் என்கிறார் மோடி. அதன் அர்த்தம் அப்படியல்ல. அவர்களேல்லாம் இணைந்திருப்பது, தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கமும் இந்த நாட்டில் மோடிக்கு எதிராக இணைந்திருப்பதையே காட்டுகிறது. அதன் எதிரொலியாக விவசாய தொழிலாளர்களின் மிகப்பெரிய பேரணி மகாராஷ்ட்ரா, குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒன்றிணைந்து பேரணிகள் நடத்தியிருக்கிறார்கள். முதலாளித்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஒழிப்பதற்கு இதுபோன்ற தொழிலாளர் வர்க்கங்கள் ஒன்றிணைந்திருக்கின்றன. நெல்லையில் லெனின் சிலை ஏன் அமைந்திருக்கிறதென்றால், இங்குதான் சுதந்திர போராட்ட வீரர்களான வ.வு.சி.யும், பாரதியாரும் பிறந்தார்கள். இவர்கள் சுதந்திரத்திற்காக போராடிய முன்னோடிகள், அதனால்தான் இங்கே நெல்லையில் லெனின் சிலை அமையப்பெற்றிருக்கிறது.

 

lenin




மேலும் மகாகவி பாரதியார் லெனினின் மார்க்ஸிய தத்துவத்தை பற்றி பாடலாகப் பாடியவர். வ.வு.சி., பாரதியார் ஆகியோர்களை வெள்ளை ஏகாதிபத்தியம் கைதுசெய்தபோது அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முதன்முதலாக தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கத்தினரும் போராடினார்கள். மோடி அரசின் பதினொறு பணக்காரர்கள் வங்கியின் பணத்தை கடன் வாங்கி வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். அதிலொருவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு நான் இனி இந்திய குடிமகன் இல்லை என்று சொல்லிவிட்டார். வெளிநாட்டிற்கு தப்பிய அவர்மீது எந்தவிதமான கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கமுடியாது. இதுதான் தற்போதைய நிலை. மகாபாரதத்தில் கௌரவர்கள் தரப்பில் இரண்டுபேரை சொல்லுவார்கள் அதேபோன்றுதான் இப்போது மோடி, அமித்ஷா என்கிறார்கள். இந்துத்துவா அமைப்பினருக்கு கௌரவர்கள் நூறு பேர்களின் பெயர்கள் தெரியுமா தெரியாது எனவே மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். என்பதுதான் எங்களின் கொள்கை. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு துணை தேவைப்படுகிறது. எனவே அதற்கு துணையானவர்களையும் முறியடிக்கவேண்டும். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வேற்றுமையிலும் ஒற்றுமையைக்கொண்டிருக்கிறது. அவர்கள் சமூகநீதி கொள்கையை நிலைநாட்ட முற்படுகிறார்கள் என்று பேசினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Nellai Lok Sabha Constituency Announcement of Congress candidate for the by elections!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார். 

Next Story

தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு; உடனடியாக பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) வெளியிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி -  பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர்  ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  த.மா.காவுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட இருப்பதால், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.