Skip to main content

குஷ்பு வைத்த 2 டிமாண்ட்!!! -பா.ஜ.க. தலைமை ஆலோசனை!

Published on 12/10/2020 | Edited on 12/10/2020
eee

 

 

குஷ்பு விலகல் தொடர்பாக பா.ஜ.க.வில் நடைபெற்ற பேரங்கள் ஒவ்வொன்றாக வெளியே வரத்தொடங்கியுள்ளன. கடந்த மாதம் பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளை அறிவித்தது. அதில் தமிழகத்தை சேர்ந்த எச்.ராஜா, ஏற்கனவே தமிழக பாஜகவிற்கான பொறுப்பு வகித்த முரளிதரராவ் போன்றோர் இடம்பெறவில்லை. 

 

அதற்கு காரணம், குஷ்பு பா.ஜ.க.விற்கு வரப்போகிறார் என்கிற செய்திதான். ஒரு மாதத்திற்கு முன்பே குஷ்புவின் கணவர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகனின் ஏற்பாட்டில் ஜெ.பி.நட்டாவை சந்தித்தார். அந்த சந்திப்பில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளராக இயங்கும் பூபேந்திரயாதவ், கர்நாடகாவில் அமைச்சராக இருக்கும் ரவியும் இருந்தார்கள். 

 

அந்த சந்திப்பு முடிந்தவுடன் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்கள் இருக்கிறது என குஷ்பு ட்வீட் செய்தார். அதனை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்தார்கள்.

 

உடனே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் குஷ்புவிடம் பேசினார். காங்கிரஸில் நல்ல பொறுப்பு வாங்கித்தருவதாக உறுதி அளித்தார். குஷ்பு பாஜகவில் சேரப்போகிறார் என செய்திகள் சிறகடித்து பறந்தது. வேணுகோபாலுடன் பேச்சுவார்த்தையில் இருந்ததால் குஷ்பு பாஜகவில் சேரும் செய்திகளை வன்மையாக மறுத்தார்.

 

குஷ்பு பாஜகவுடன் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் காங்கிரஸுக்கு தெரிந்தவுடன் எந்த பதவியும் தரவில்லை. இதனால் விரத்தியடைந்த குஷ்பு மறுபடியும் எல்.முருகன், ஜெ.பி.நட்டா, பூபேந்திரயாதவ் மற்றும் கர்நாடக அமைச்சரான ரவி ஆகியோர் முலம் பாஜகவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டார். அவர்கள் நேற்று டெல்லி வருமாறும், பாஜகவில் இணையுமாறும் கூறினர். 

 

அதன்படி ரவி, எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைந்தார். இணைவதற்கு முன்பு அவர் பாஜக தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பதவியை கொடுக்க வேண்டும், தன்னை தமிழகத்திற்குள் சுருக்கிவிடக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு என்ன பதவி அளிப்பது என்பது பற்றி பாஜக இன்னமும் முடிவு செய்யவில்லை என்கிறது டெல்லி பாஜக வட்டாரங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.