Advertisment

"உச்சநீதிமன்றத்தில் தடை கேட்போம்" - தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டிய திட்டத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு!

EPS

Advertisment

தென் தமிழக மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு, கடந்த 21 ஆம் தேதி தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமிஅடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டத்திற்கு கர்நாடக ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்நாடக அரசு, இன்று (24.02.2021) மீண்டும் கூறியுள்ளது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங்ஷெகாவத்தை, டெல்லியில் சந்தித்துப் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்ரமேஷ் ஜர்கிஹோலி, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை கர்நாடகா ஒருபோதும்ஏற்காது எனவும், இந்தத் திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை கேட்போம் எனவும்தெரிவித்துள்ளார்.

karnataka cauvery edapadi palanisamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe