Skip to main content

எனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்: ரஜினியை சந்தித்தப் பின் கமல்

Published on 18/02/2018 | Edited on 20/02/2018
kamal


நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி, அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார். 21-ந் தேதி (புதன்கிழமை) காலை ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன்  மதுரையில் 21-ந்தேதி மாலை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி தொண்டர்களை திரட்டும் ஏற்பாடுகளையும் அவர்கள் ஓசையின்றி செய்து வருகிறார்கள். தனது அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன்பு சிலரை நேரில் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு ரஜினியை சந்தித்துப் பேசினார்.

 

kamal 2


 

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கமல், 
 

ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது. அரசியல் ரீதியானது அல்ல. அரசியல் பயணத்திற்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து சொல்லிவிட்டு செல்கிறேன். அவர்களிடம் வாழ்த்து பெறுகிறேன். எனது அரசியல் பயணத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். ஸ்டாலினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது தவறு. இவ்வாறு கூறினார்.

படம்: எஸ்.பி.சுந்தர்

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறிந்த பால்! ரஜினி-கமல் கூட்டணி குறித்து அமைச்சர் கமெண்ட்

Published on 20/11/2019 | Edited on 20/11/2019
r

 

அவசியம் ஏற்பட்டால் நானும் ரஜினியும் அரசியலில் இணைவோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். ரஜினிகாந்தும் இதையே தெரிவித்துள்ளார்.  இந்நிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’முறிந்த பாலில் ஊற்றிய திரிந்த தயிர் போல பலனளிக்காது’’என்று தெரிவித்தார்.


 

Next Story

அரசியல் ரோஜா படுக்கை அல்ல! - ரஜினி, கமலுக்கு அறிவுரை வழங்கிய நடிகர்

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

அரசியல் ஒன்றும் ரோஜாப்படுக்கை அல்ல என ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்கா அறிவுரை வழங்கியுள்ளார். 

 

Sathrugan

 

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறார். இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்கா ரஜினி, கமலின் அரசியல் வருகை குறித்து நேற்று மும்பையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

 

அப்போது அவர், ‘ரஜினியும், கமலும் எனது நண்பர்கள்தான். அவர்கள் அரசியலில் குதிப்பதற்கு முன்னர் அதற்கான திரைக்கதைகளை வகுத்துவிட்டுத்தான் வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அதேசமயம், தங்களது அரசியல் பிரவேசம் குறித்து அவர்கள் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால் வேண்டாமென்று அவர்களைத் தடுத்திருப்பேன். அரசியலில் இருக்கும் பல கண்ணிவெடிகள் குறித்து அவர்களுக்கு விளக்கியிருப்பேன். அரசியல் என்பது அவர்கள் நினைப்பதைப் போல் ரோஜாப் படுக்கை அல்ல. தமிழகத்தில் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. அவரைத் தாண்டி இந்த நடிகர்களால் மிகப்பெரிய இடத்தை அடைந்துவிட முடியாது’ என தெரிவித்துள்ளார்.