Skip to main content

குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான் காரணமில்லை! - ஜாமீன் வழங்கிய நீதிபதி

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆக்சிஜன் சிலிண்டர்கள் தீர்ந்துபோனதால், மூளைவீக்கப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஏராளமான குழந்தைகள் உயிரிழந்தன. அப்போது தன்னால் முடிந்தளவிற்கு சிலிண்டர்களை வெளியில் வாங்கி குழந்தைகளைக் காப்பாற்றியவர் மருத்துவர் கஃபீல்கான்.

 

ஆனால், சில தினங்களிலேயே அவர்மீது கிரிமினல் வழக்குப்பதிந்து சிறையில் தள்ளியது அரசு. கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் சிறையில் இருந்த கஃபீல்கான் பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

 

kafeel

 

அவர் சிறையில் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல்நலக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கஃபீல்கானுக்கு உரிய நீதி வழங்கவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்தன.

 

Kafeel

 

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் கஃபீல்கான் தரப்பில் மீண்டும் ஜாமீன் கோரி மனு கொடுக்கப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம் கஃபீல்கானுக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்த நிலையில், அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘குழந்தைகள் இறப்புக்கு கஃபீல்கான்தான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கும், கஃபீல்கானுக்கும் இடையே எந்த வர்த்தக தொடர்பும் இல்லை. மருத்துவ பணியில் அலட்சியமாக அவர் நடந்துகொண்டதாக தகவல்கள் இல்லை. இதுவரை அவர்மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், சாட்சிகளை மிரட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை’ எனக் கூறி அரசு மனுவை தள்ளுபடி செய்து, மருத்துவர் கஃபீல்கானுக்கு ஜாமீன் வழங்குவதை உறுதிசெய்தார்.

 

Kafeel

 

முன்னதாக, மருத்துவர் கஃபீல்கான் சிறையில் இருந்தபடி தனது நிலை குறித்து கடிதம் எழுதியிருந்தார். அதில், நிர்வாகக் கோளாறுகளை மறைப்பதற்காக தான் பலிகடா ஆக்கப்பட்டதாகவும், தன் வாழ்க்கை தற்போது தலைகீழாக மாறிப்போனதாகவும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தி ராமர் கோயில் திறப்பு; கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட உ.பி. அரசு! 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Inauguration of Ayodhya Ram Temple; U.P.  Government ordered educational institutions.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநில அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்று ராமர் கோயில் திறப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் வர வாய்ப்புள்ளதால், 18 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தகவல் பலகைகளை வைக்க வலியுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“அயோத்தி ராமர் கோவில் தான் ராம ராஜ்ஜியத்தின் தொடக்கம்” - யோகி ஆதித்யநாத்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 Yogi Adityanath says The Ram temple in Ayodhya is the beginning of Rama's kingdom

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சத்தீஸ்கர் மாநிலம், கோன்டா நகரில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஆட்சியில் ஜாதி, மத அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் இருப்பது தான் ‘ராம ராஜ்ஜியம்’. அரசின் திட்டங்களின் பலன்கள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களிடம் போய் சேரும். அனைவருக்கு நாட்டின் வளர்ச்சியில் இருந்து உரிய பங்கு கிடைக்கும். 

 

பாதுகாப்பு, வசதிகள் மற்றும் வளங்களின் உரிமைகள் ஆகியவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். இது தான் ராமராஜ்ஜியம். உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேலும், இந்த கோவில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். அயோத்தியில் உருவான ராமர் கோவில் தான் ராம ராஜ்ஜியம் தொடங்கப்பட்டதற்கான அறிகுறி. இந்த  விஷயத்தில் உத்தர பிரதேச மக்களை விட சத்தீஸ்கர் மக்கள் தான் அதிகளவில் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் சத்தீஸ்கர் மாநிலம் தான் ராமரின் தாய்வழி இடம்

 

அதே நேரத்தில் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட விடாமல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இப்போது கூட சத்தீஸ்கரில் ‘லவ் ஜிகாத்’ மதமாற்றம் ஆகியவற்றை ஆதரிக்கும் நபராக முதல்வர் பூபேஷ் பாகேல் இருக்கிறார். பா.ஜ.க சத்தீஸ்கரில் ஆட்சி அமைந்தால், லவ் ஜிகாத், மாடுகளை கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.