Skip to main content

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் வீடியோ கான்பரஸ் மூலம் விசாரணை - 17 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
ay

 

சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை வழக்கில் 17 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.   புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது.  விசாரணைக்கு பின்னர் வரும் 24ம் தேதி வரை 17 பேரின் காவலை நீட்டித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கடந்த ஜூலை 31ல் நடைபெற்ற விசாரணையில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை 17 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.  இன்றைய விசாரணையில் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 


அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வயது மாற்றுத்திறன் சிறுமியை  பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக எழுந்த புகாரில் குடியிருப்பில் வேலை செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் சிறையில் அடைப்பதற்காக கடந்த 17ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது  அங்கிருந்த வழக்கறிஞர்கள் 17 பேர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தினர். பின்பு போலீசார் நீண்ட போராட்டத்துக்கு பின் கைதிகளை மீட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து சிறையில் உள்ள 17 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என சென்னை  மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட நேரிடும் என்ற காரணத்தால், சென்னை புழல் சிறைக்கே சென்று 5 நாள்  போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.  அதன்படி, போலீசார் குற்றவாளிகளை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, போலீசார் விசாரணை முடிந்து குற்றவாளிகள் 17 பேரையும் ஜுலை மாதம் 31ம் தேதி  சென்னை புழல் சிறைக்கு கொண்டு வந்தனர்.

 

அப்போது மீண்டும் புழல் சிறைக்கு சென்ற நீதிபதி மஞ்சுளா, குற்றவாளிகளிடம் 5 நாள் போலீஸ் காவல் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அனைவரையும் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து  உத்தரவிட்டார். அதன்படி இன்று மீண்டும் இவ்வழக்கை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரித்த மகளிர் நீதிமன்றம் 17 பேரின் காவலையும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து; வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர்; அயனாவரத்தில் பரபரப்பு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

A house fire; cylinder incident in Ayanavaram

 

சென்னை அயனாவரத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை தலைமைச் செயலக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயனாவரம் மேடவாக்கம் குட்டியப்பன் தெருவில் தனசேகர் என்பவர் வீட்டில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மொத்தமாக நான்கு தளங்கள் இந்த வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் வீட்டில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

 

கீழ்பாக்கம், அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரை பீச்சி அடித்து தீயணைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் இருந்த சிலிண்டர் விடுதி சிதறியது. இதில் முதல் தளத்தில் பெருமளவில் சேதம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்தது. இந்த விபத்தால் அருகிலிருந்த வீட்டின் கட்டிடங்களும் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித சேதமோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

Next Story

கரோனா பாதிப்பு- அயனாவரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

chennai ayanavaram area minister inspection coronavirus prevention


சென்னையில் திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அயனாவரத்தில் ஆய்வு செய்தார். மேலும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அமைச்சர் கபசுர குடிநீரை வழங்கினார். இந்த ஆய்வின் போது அமைச்சருடன், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
 


ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தனி மனித இடைவெளி மிகப்பெரிய சவாலாக உள்ளது; தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் பணியாளர்கள் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றுகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா இல்லாத திரு.வி.க.நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன். கரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையையும் மாற்ற முடியும்." என்றார். 
 

chennai ayanavaram area minister inspection coronavirus prevention


தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "சென்னையில் கரோனா தொற்று இல்லாத 84% தெருக்களில் கரோனா வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திரு.வி.க. நகர் பகுதிகளில் கடந்த 14 நாட்களாகத் தொற்று இல்லாத பகுதிகளும் உள்ளது. தொற்று உள்ள தெருக்களில் மேலும் கரோனா பரவாமலும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.