Skip to main content

இந்தியா VS பாகிஸ்தான் !  ராணுவ வலிமையில்  யார் பெரியண்ணன் ? 

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

 

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல் மிரள வைத்திருக்கிறது. இந்தியாவின் இந்த அதிரடித் தாக்குதலை சர்வதேச நாடுகள் உற்று கவனிக்கத் துவங்கியுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையும் வெளியுறவுத் துறையும் இணைந்து அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறது. 

 

in


 
இந்த நிலையில்,   பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் தொடர்ந்து  பதற்றம் சூழ்ந்து வருவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையே யுத்தம் வெடிக்குமோ  என்கிற அச்சம் உருவாகி வருகிறது. 

இதனால், பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகமும், பாதுகாப்புத்துறை அமைச்சகமும் அவசர ஆலோசனை நடத்தியதையடுத்து தனது ராணுவத்தை தயார்படுத்தி வருகிறார்  பாக் பிரதமர் இம்ரான்கான். மேலும்,  இன்று இரவு சில முக்கிய முடிவுகளை பாகிஸ்தான்  எடுக்கலாம் என்கிற செய்திகளும்  கசிகின்றன.


இந்த நிலையில், இரண்டாவது சர்ஜிக்கல்  தாக்குதலை இந்தியா தொடங்குமோ ? என்கிற  விவாதங்கள் சர்வதேச அளவில்  எதிரொலிக்கின்றன. 

இந்தச் சூழலில்,  இந்தியா - பாகிஸ்தானின் ராணுவ வலிமை குறித்து ஒரு கண்ணோட்டம் : 

 இந்தியா- பாகிஸ்தான்  நாடுகளின் ஆயுதங்கள் மற்றும் ராணுவ வலிமை  பற்றி,  அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகள் மையத்தின் தகவல்களை ஆராய்ந்த போது பல புள்ளி விபரங்கள் கிடைத்தன.

 இந்தியாவில் 5,000 கி.மீ. முதல் 9,000 கி.மீ. வரை  பாயும் அக்னி -3 ரகங்கள் உள்பட 9  வகையான ஏவுகணைகள் இருக்கின்றன. 

 

in

 

பாகிஸ்தானின் உள்ள  ஏவுகணைகள் சீன நாட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை. இவைகள், இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் சென்றடைய  கூடியதாகவும்,  குறுகிய  அளவிலான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகவும்  உள்ளன. ஆனால், அந்த வகையில் 2 ஏவுகணைகள் மட்டுமே வைத்திருக்கிறது பாகிஸ்தான். 

 

அணு ஆயுதங்களை ஒப்பிட்டளவில் பார்க்கும் போது இந்தியாவிடம் 130-140 ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு ஆயுதங்களும் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

 

இந்திய ராணுவம்   10 லட்சத்து 20 ஆயிரம் ராணுவ வீரர்களை பெற்றிருக்கிறாது . மேலும், 3565 போர் டாங்கிகளை வைத்திருக்கின்றது. தவிர,  3 ஆயிரத்து 100 காலாட்படை போர்  வாகனங்கள்,  9 ஆயிரத்து 719 பீரங்கிகள், 336 கவச வாகனங்களை  வைத்திருக்கிறது இந்திய பாதுகாப்புத்துறை. 

 

பாகிஸ்தான் ராணுவத்தை எடுத்துக்கொண்டால்,  5,60,000 போர்வீரர்கள், 2496 டாங்கிகள், 1605 கவச வாகனங்கள், 4472 பீரங்கிகள், 375  தானியங்கி  பீரங்கிகள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதேபோல,  1 லட்சத்து 27 ஆயிரத்து 200 பணியாளர்களும், 814 போர் விமானங்களும் இந்தியா  விமானப்படையிடம் இருக்கிறது. 

ஆனால், 425 போர் விமானங்களை மட்டுமே கொண்டுள்ளது பாகிஸ்தான்.  இதில் சீன நாட்டின்  எஃப். என்.ஜி. -  7 மற்றும் அமெரிக்க நாட்டின்  எப்-16 சபோர்  ரக  விமானங்கள் மட்டும்தான் ஸ்பெசல் ! அதே சமயம்,  வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள்  7 இருக்கின்றன. இந்தியாவிடமோ  இவைகள் 4 தான் உள்ளது. 

 

இந்திய கடற்படையிடம்   16 நீர்மூழ்கிக் கப்பல்களும் ,  14 ஆழத்துளைத்து அழிக்கும் கப்பல்களும், 13 போர்க்கப்பல்களும், 106 கடற்கரை ரோந்து போர் கப்பல்களும், 75 அதி திறன் கொண்ட போர் விமானங்களும் இருக்கின்றன. கடற்படை வீரர்களை கணக்கிட்டால் 67 ஆயிரத்து 700  வீரர்களை வைத்திருக்கிறது இந்தியா. 

ஆனால், பாகிஸ்தானின் கடற்பரப்பு மிக குறுகிய எல்லைகளை கொண்டது. அந்த வகையில் 17 கடற்கரை ரோந்து கப்பல்களையும்,   8 நீர்மூழ்கிக் கப்பல்களையும் , 9 போர்கப்பல்களையும் , போர் திறன் கொண்ட 8 விமானங்களையும் கொண்டுள்ளது பாகிஸ்தான். 

 

இரு நாடுகளையும் ஒப்பிடும் போது, இந்தியாவை விட பாகிஸ்தானின்  ராணுவ வலிமை  குறைவுதான்.  சர்வதேச அளவில்  ராணுவ வலிமையில்  4-வது ரேங்கில் இந்தியாவும் ,  17-வது ரேங்கிலும் பாகிஸ்தானும்  இருப்பது குறிப்பிடத் தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.