Skip to main content

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஸ்வந்த் தூக்கு தண்டனைய உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018


சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை உறுதி செய்தது.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினி, 2017ல் பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

 

 

இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாகிய இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், தஸ்வந்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து, தஸ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரு கிலோ கஞ்சா கடத்தியதற்கு தூக்கு; சிங்கப்பூரில் தமிழருக்கு தண்டனை நிறைவேற்றம்

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

 Hang for smuggling one kilogram of ganja; Execution of sentence for Tamil person in Singapore

 

உலகின் மிகக் கடுமையான போதைப்பொருள் எதிர்ப்பு சட்டங்கள் சிங்கப்பூரில் கடைபிடிக்கப்படுகின்றன. சிங்கப்பூர் சட்டம் போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனையை கட்டாயமாக்குகிறது.

 

இந்நிலையில் சிங்கப்பூரில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையிலிருந்த தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கிலோ கஞ்சாவை விநியோகம் செய்வதற்கு போக்குவரத்துக்கான சதியில் ஈடுபட்டதாக தமிழரான தங்கராஜ் சுப்பையா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 

இதற்காக தங்கராஜ் சுப்பையாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக சிறையிலிருந்த அவர் இன்று தூக்கிலிடப்பட்டு தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன் தங்கராசுவின் குடும்பத்தினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கு கடைசி நிமிட கருணை மனு கடிதங்களை வழங்கினர். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படாத சூழலில் அவர் தூக்கிலிடப்பட்டுள்ளார்.  

 

 

 

Next Story

7 மாத குழந்தைக்கு பாலியல் தொந்தரவு.. ராஜஸ்தான் புதிய சட்டத்தால் தூக்கு!

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

ராஜஸ்தான் மாநிலத்தில் 7 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது இளைஞருக்கு, அம்மாநிலத்தின் புதிய சட்டத்தின் மூலம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 
 

Rape

 

 

 

பெண்களைப் பேணும் நாடு என்ற நிலை, இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதே அதற்கு உதாரணம். இதனைத் தடுக்க மத்திய அரசு போக்ஸோ சட்டத்தில் கடுமையான தண்டனைகள் விதிக்கும்படியான சில மாற்றங்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் அந்தக் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 
 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலத்திலும் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது அரசு. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியில் சித்தரவதை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் 19 வயது இளைஞருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 7 மாத குழந்தையைக் கடத்திக் கொண்டுபோய் பாலியல் வன்புணர்வு செய்ததாக, 19 வயது இளைஞர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகள் குற்றத்தை உறுதிசெய்துள்ள நிலையில், தற்போது அந்த இளைஞருக்கு தூக்குதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.