Advertisment

தமிழ் மொழியை சனியனே என்று ஈ.வெ.ரா. பேசினார்: எச்.ராஜா பேட்டி

திரிபுராவில் லெனின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கருத்து தெரிவித்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ''நாளை தமிழகத்தில் பெரியார் சிலை'' என்று தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த பதிவை நீக்கிவிட்டு, தான் அந்த பதிவை போடவில்லை என்றார்.

Advertisment

இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,

Advertisment

பெரியார் சிலை தொடர்பாக என்னுடைய கருத்துக்கு எதிர் கருத்து கூறுபவர்களுக்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை. தமிழ் மொழியை சனியனே என்று ஈ.வெ.ரா. பேசியதற்கு ஆதாரம் உள்ளது. தமிழ் மொழியே இருக்க கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டது தான் திராவிடம். இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்து சொல்வதால் தான் வசைபாடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

h.raja
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe