Skip to main content

பக்தர்களை ஏமாற்றிய அரசாங்கம் – பணக்காரர்களுக்கு சுலபமாக அண்ணாமலையார் தரிசனம்?.

Published on 29/04/2018 | Edited on 30/04/2018
annamaliyar girivalam

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரே மலையாக உள்ளார் என 14 கி.மீ விட்டம்வுள்ள மலையை வலம் வருகிறார்கள்.

 

பௌர்ணமி தோறும் வரும் பக்தர்கள் அளவை விட கார்த்திகை மாத பௌர்ணமியன்றும், சித்திரை மாத பௌர்ணமியன்று அதிகளவு பக்தர்கள் வருவார்கள். அதாவது சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதற்காக ஒவ்வொரு வருடமும் இந்த இரண்டு பௌர்மணயின் போது மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 2018 சித்திரை மாத பௌர்ணமி ஏப்ரல் 29ந்தேதி காலை 6.35க்கு தொடங்கி ஏப்ரல் 30ந்தேதி காலை 6.30க்கு முடிகிறது.

 

15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன. 2 ஆயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர், பக்தர்களின் நலனுக்காக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

 

குடிநீர் ஏற்பாடுகள் கிரிவலப்பாதை மற்றும் கோயில் வளாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது, வெயில் காலம் என்பதால் கிரிலப்பாதையில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சாலையில் தண்ணீர் ஊற்றப்படும், இதனால் பக்தர்கள் வெயில் சூடுயில்லாமல் நடந்து செல்லலாம், கோயிலுக்குள் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என 28ந்தேதி மாலை 5 மணிக்கு கோயில் வளாகம், தற்காலிக பேருந்து நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

அமைச்சர் குறிப்பிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுயிருந்ததா என கண்காணித்தபோது, சிறப்பு ஏற்பாடுகள் என்பது பெரும்பாலும் எதுவும் செய்யவில்லை என தெரியவந்தது. காலை 11 மணிக்கு மேல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது, இதனால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடக்க முடியாமல் தவித்தனர். கிரிவலப்பாதையில் சுமார் 5 கி.மீ வரையே மரங்கள் அடர்ந்துயிருக்கும் அந்த பகுதியில் கிரிவலம் வரும்போது மட்டும் காலுக்கு சூடு தெரியாது. மற்ற இடங்களில் வெயில் சூடு தெரியும். இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் ஓய்வு அறைகளை அமைக்கவில்லை மாவட்ட நிர்வாகம்.

அதோடு ஈசான்யம் மைதானம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், மார்க்கெட்டிங் கமிட்டி, தண்டராம்பட்டு சாலை போன்ற தற்காலிக பேருந்து நிலையங்களில் 10க்கு 10 அளவில் பேனர்களால் அமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வு நிலையம் என அமைக்கப்பட்டது. மற்ற மாதங்களில் சரி. கோடை வெயில் தமிழகத்தில் சுட்டெரிக்கும் மாவட்டத்தில் 3வது மாவட்டமாக திருவண்ணாமலையுள்ளது. அப்படிப்பட்ட மாவட்டத்தில் லட்சகணக்கான பக்தர்கள் வரும்யிடத்தில் ஒரு நூறு பேர் அமரும் அளவுக்காவுது இந்த மாதம் ஒய்வு அறை அமைத்துயிருக்கலாம் என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

 

அதேபோல் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிரிவலப்பாதை முழுவதும் சாலையில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. அதனையும் முறையாக செய்யவில்லை. கடமைக்கு என செய்தனர்.

கிரிவலப்பாதையில் உள்ள தண்ணீர் டேங்க்களில் பக்தர்கள் குடிக்க நிரப்பப்படும் தண்ணீர் 2 அல்லது 3 மணி நேரத்தில் காலியாகிவிடுகின்றன. இதனால் பக்தர்கள் குடிதண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தொடர்ச்சியாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கார்த்திகை மாத தீபத்திருவிழாவின் போதும், சித்திரை மாத பௌர்ணமியின் போது பக்தி அமைப்புகள் பக்தர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றனர், மாவட்ட நிர்வாகமாகட்டும், ஆய்வுக்கு வரும் அமைச்சர்களாகட்டும் இந்தமுறை அந்த பிரச்சனை இருக்காது என ஒவ்வொரு முறை வாக்குறுதி தருகின்றனர். அந்த வாக்குறுதிகள் காற்றோடு போய்விடுகின்றன. இந்த முறையும் அதேதான் நடந்தது.

 

திருவண்ணாமலை மாவட்ட திமுக உட்பட சமய அமைப்புகள், தொண்டு அமைப்புகள் பலயிடங்களில் பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர், மோர் வழங்கினார்கள். அதுவே பக்தர்களின் தாகத்தை தீர்த்தது. கோயில் நிர்வாகம் சார்பில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தண்ணீர், மோர் தரப்படும் என அமைச்சர் அறிவித்தார். இலவச தரிசனம் செய்ய சென்றவர்களுக்கு தண்ணீர் சுலபமாக கிடைத்தது. 50 ரூபாய் டிக்கட்டில் சென்ற பக்தர்களுக்கு தண்ணீர் வசதியே செய்யப்படவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.

 

அதோடு, கோயிலுக்குள் சிறப்பு தரிசனம் இல்லை என்றார் அமைச்சர். ஆனால் விவிஐபிகளுக்காக சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு அந்த வழியாக கோயிலுக்குள் சென்று சுலபமாக தரிசனம் செய்துவிட்டு வந்தனர். கோயிலுக்குள் உள்ள புரோக்கர்களும், சில சிவாச்சாரியர்களும் தங்கள் பங்குக்கு பணம் வாங்கிக்கொண்டு அதே வழியில் பணம் தரும் பக்தர்களை அழைத்து சென்று அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை தரிசிக்கவைத்தனர். முறையாக கோயில் நிர்வாகத்தில் வழங்கப்படும் தரிசனத்துக்கான அனுமதி டிக்கட் வாங்கிக்கொண்டும், அதை வாங்க முடியாதவர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று தரிசனம் செய்பவர்கள் பல மணி நேரம் காத்திருந்தே தரிசனம் இந்தமுறையும் செய்தனர்.

 

கிரிவலத்துக்காக வரும் வாகனங்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த ஆன்லைன் புக்கிங் வசதியை மாவட்ட எஸ்.பி பொன்னி துவக்கிவைத்தார். 29ந்தேதி இந்த சேவை துவங்கும் என்றார். 28ந்தேதி காலையே புக்கிங் முடிந்தது என்றது அந்த வெப்சைட். அதுமட்டும்மல்ல முறையாக காவல்துறை வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யாதது, சரியான சாலை வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு சாலையிலும் 5 கிலோ தூரத்துக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நின்றதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது.

 

கோடை விடுமுறை, வாரவிடுமுறை போன்றவற்றால் 28ந்தேதி மாலையே பக்தர்கள் கிரிவலம் துவங்கிவிட்டார்கள், லட்சகணக்கான பக்தர்கள் தற்போது கிரிவலம் வருகிறார்கள். பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து தருவோம் என அரசுத்துறைகள் அறிவித்தன. ஆனால் இந்தமுறையும் மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் பக்தர்களை நன்றாக ஏமாற்றியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 girivalam

 

girivalam 1

 

girivalam 2

 

girivalam 3

 

girivalam 4girivalam 5girivalam 6

 

girivalam 7girivalam 8girivalam 9girivalam 10girivalam 11girivalam 12girivalam 13girivalam 14

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.