Skip to main content

ஸ்டெர்லைட்டை மூட அரசு முயற்சி: எடப்பாடி பேட்டி

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
eps

 

 


ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை சட்டத்தின் வாயிலாக அணுகி அதனை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மக்களுடைய உணர்வை மதித்து 2013ல் இந்த ஆலையை மூடுவதற்கு ஜெயலலிதா என்ன பணிகளை செய்தாரோ அதே பணிகளை தொடர்ந்து இந்த அரசு நடைமுறைபடுத்தி வருகிறது. ஆனால் வேண்டுமென்றே எதிர்கட்சியை சேர்ந்தவர்களும், சில இயக்கத்தை சேர்ந்தவர்களும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு இப்படி போராட்டங்களை நடத்திகொண்டிருக்கிறார்கள். 

14.04.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் விளம்பரம் செய்துள்ளார். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்து பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புதுப்பிக்க அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது. அந்த கோரிக்கையை மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது என்ற செய்தி அதில் முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதி மக்களின் உணர்வை புரிந்து கொண்டு, அவர்களின் வேண்டுகோளை ஏற்று சட்டத்திற்குட்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளார்கள். போராட்டம் நடத்தியபோதெல்லாம் அமைதியான முறையில் நடந்துகொண்டார்கள். ஆனால் இந்தமுறை எதிர்கட்சியினரும், சில இயக்கங்களும் இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றே இந்த போராட்டத்தை இன்று ஒரு மோசமான ஒரு சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். உண்மையிலே உயிரிழந்த அத்தனை பேருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்துள்ளோம். அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. அவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்களோ, அவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசை பொறுத்தவரையில், மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் அரசு. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை சட்டத்தின் வாயிலாக அணுகி அதனை முறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார். 

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.