முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், பா.ஜ.க.வின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் உள்ளிட்டோர் முன்னிலையில் இணைந்தார்.
அப்போது பேசிய முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை, "திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் நரேந்திரமோடியை பாராட்டினார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னால் ஆன முயற்சிகளைச் செய்வேன். பிரதமர் மோடியின் திட்டங்களால் கவரப்பட்டு சாதாரண தொண்டனாக பா.ஜ.க.வில் இணைந்தேன்" என்றார்.