Skip to main content

EXCLUSIVE:   பாரதியார் நினைவு கலையரங்கம்.... எம்.ஜி.ஆர். அரசாணையை கிடப்பில் போட்ட ஆளும் அரசு..!

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

 

b

 

  "அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே.!" என பாரதியாரின் நினைவு கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டியதையும், அந்த செய்தி 1982ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழக அரசின் இதழான தமிழரசு-வில் வெளியானதையும் அப்பட்டமாக மறுத்து, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆணையை கிடப்பில் போட்டுள்ளது ஆளும் அதிமுக அரசு.

 

     " 1981ம் ஆண்டு மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழாவினை டிசம்பர் 11, 12 மற்றும் 13 தேதிகளில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில் எட்டையபுரத்தில் நடத்தியது தமிழக அரசு. மணிமண்டபம் அருகேப் போடப்பட்ட மேடையில் கர்நாடக முதல்வர் குண்டுராவ், கேரள கவர்னர் ஜோதி வெங்கடாசலம் உட்பட நாட்டின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்க, பாரதியின் 100 ஆண்டு விழாவில்,  பாரதி பெயரில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி, நூற்பாலை மற்றும் பாரதியின் விடுதலைப் போராட்டத்தினையும், தேசப்பக்தியையும் போற்றும் விதமாக 10 ஏக்கர் அளவில் பாரதி நினைவு கலையரங்கம் கட்டப்படும் சில முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டதோடு அதற்கான அடிக்கல்லையும் கலந்து கொண்ட விருந்தினர்களை வைத்து துவக்கி வைத்தார் எம்.ஜி.ஆர்.. இதில் கேரள கவர்னர் ஜோதி வெங்கடாசலம் பாரதி நினைவு கலையரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். மணிமண்டபத்தின் பின்புறமுள்ள இடமே கலையரங்கம் கட்டுவதற்கான இடமும் என அறிவிக்கப்பட்டது.

 

b

   

இது குறித்து தமிழகரசின் இதழான தமிழரசுவிலும் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பின் இந்த கலையரங்கத்திற்கான வடிவமைப்பு ஓவியத்தை சிறப்பாக யார் தருகிறார்களோ.? அவர்களுக்குப் பரிசு என்றும் அறிவிக்கப்பட்டு வரைபட தேடுதலும் நடைபெற்றதோடு, இடமும் அரசால் கையகப்படுத்தப்பட்டது. கலையரங்கிற்கான ஓவியமோ தமிழரசு இதழின் அட்டைப்படமாகவும் 1985ம் ஆண்டு வெளிவந்தது. எம்.ஜி.ஆர்.உடல் நலக்குறைவிற்கு பின் அத்திட்டம் அம்போவானது. ஏறக்குறைய 35 வருஷமாகப் போராடுறேன். இன்னும் ஒன்றும் நடக்கவில்லை. ஆளும் அரசிற்கு எழுதிப் பார்த்துவிட்டேன். எழுதி கை ஒடிந்தது தான் மிச்சம். தகவலறியும் உரிமை சட்டத்தில் கேட்டேன். அப்படி எதுவும் அரசாணையே இல்லை. அது தான் இது என கல்கி டீம் கட்டிய மணிமண்டபத்தையே கலையரங்கம் என்கிறது செய்தித்துறை. எம்.ஜி.ஆரின் ஆணைக்கு மதிப்பில்லை போலும். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் வாழும் காலத்திலேயே நினைவு கலையரங்கம் வந்தால் நன்றாக இருக்கும்." என்கிறார் பாரதி ஆய்வாளரும், எழுத்தாளுருமான இளசை மணியன்.

 

e

   

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரத்தில் ஆண்டுதோறும் தமிழிசை விழா நடைபெறுவது இன்றும் வழக்கமான ஒன்று. 1946ம் வருடம் கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி.சதாசிவம், ராஜாஜி மற்றும் டி.கே.சி.,இவர்களைக் கொண்டு நடந்த தமிழிசை விழாவினில் எட்டையபுர பள்ளிக்கூட ஆசிரியர் நாராயணன் தலைமையில், " நாட்டின் விடுதலை வேள்விக்கு வித்திட்ட மகாகவி பாரதியின் மகத்தான சேவையினைப் பாராட்டும் விதமாகவும், அதே வேளையில் வளரும் தலைமுறையினருக்கு பாரதியின் வரலாறு தெரிய வேண்டும். இதற்காக இங்கு ஒரு நினைவு மணிமண்டபம் கட்டினால் மிகப் பெரிய வரபிரச்சாதமாக இருக்கும்." என மேடையில் வீற்றிருந்தோர்களிடம் உள்ளூர் மக்கள் கோரிக்கை வைக்க உடனே நிறைவேற்றுவோம் என மார்தட்டிய கல்கி டீம், " பாரதிக்கு மணி மண்டபக் கோவில் கட்டவுள்ளோம். நிதி தாரீர்.!!" என வேண்டுகோளையும் பொதுமக்களிடம் வைக்க, உள் நாட்டில் மட்டுமல்லாது கடல் தாண்டியும் நிதிகுவிந்த வேளையில், எட்டையபுர ஜமீன் இடத்தினைக் கொடுக்க, மாட்டுவண்டி கட்டிக் கொண்டு செங்கற்களையும், மணலையும் கொண்டு வந்து பொதுமக்களும் கலந்து கொள்ள 'சிதாலே' எனும் அற்புத கட்டிடக்கலைஞன் வரைந்து கொடுத்ததின் படி மகத்தான கவிஞன் பாரதிக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு 1947ம் வருடம் அக்டோபர் மாதம் 13ம் தேதியன்று ராஜாஜியால் திறந்து வைக்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலெட்சுமி பாடலுடன் தொடங்கிய பாரதி மணிமண்டப திறப்பு விழா, ஜீவா-வின் பாரதி பாடல்கள் பற்றிய ஆய்வுரையில் மெய்சிலிர்த்துள்ளது. அதே வேளையில் தங்களது பத்திரிகையில் புத்தக மதிப்புரைக்காக வந்த அனைத்து நூல்களையும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு தானமாக கொடுத்து உதவினர் இந்து மற்றும் சுதேசமித்திரன் நாளிதழ்கள்  இது தான் எட்டையபுரத்தில் இருக்கும் மகாகவி பாரதியின் நினைவு மண்டபத்தின் முந்தைய வரலாறு.

 

b

   

 அயன்வடமலாபுரம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் வரதராஜனோ., " எங்களுக்கு அரசியல் உணர்வையும், அடக்குமுறைக்கு எதிரான உணர்வையும் ஊட்டியதே பாரதி பிறந்த இந்த மண் தான். அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின். அரசாணையை எந்தளவிற்கு மதிக்கிறார்கள்..? என்பதற்கு பாரதி நினைவு கலையரங்க விவகாரத்தைப் பார்த்தாலே தெரியும். அவர் உருவாக்கிய கட்சியில் இருந்து கொண்டு ஆட்சி செய்பவர்கள் சிறிது கருணைப் பார்வைப் பார்த்தாவது பாரதியின் கலையரங்கம் உருவாகும். அத்தோடு இல்லாமல் எம்.ஜி.ஆர்.வாக்கிற்கு அர்த்தம் கிடைக்கும். இந்த அரசு இதையாவது செய்ய வேண்டுமென்பது இங்குள்ள அனைவரின் ஆசை.. இதனை வலியுறுத்தி மதிமுக தலைவர் வை.கோ. தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்." என்றார் அவர்.


  

சார்ந்த செய்திகள்

Next Story

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிற்கு நாம்தான் வாரிசு” - எடப்பாடி பழனிசாமி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We are Jayalalitha  M.G.R. heir says Edappadi Palaniswami

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க மற்றும் என்எல்சி அண்ணா தொழிற் தொழிலாளர்கள் ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெங்கல சிலை ரூபாய் 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. பீடம் ஏழு அடியில் அமைந்துள்ளது. 

இந்த சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி கலந்துகொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து பேசுகையில், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது; நாம்தான் அவர்களுக்கு வாரிசு. நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைத்தார்கள். அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இயக்கம். அதனால் தான் இந்த இயக்கத்தை யாராலும் உடைக்க முடியாது.  

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதில் நாம் வெற்றி பெறுவதற்கு இங்கு கூடி உள்ளவர்களே சாட்சி. இதில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என கூறுவார்கள்; இங்குள்ளவர்களின் முகத்தில் தெரியும் பிரகாசத்தை பார்க்கும் போது அது தெரிகிறது. எனவே கடலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

நாங்கள் மக்களை நம்பி இருக்கிறோம்; மக்கள் சக்தி பெற்ற இயக்கம் அ.தி.மு.க.  இந்த இயக்கத்தை உடைக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி காண்போம். ஆனால் தி.மு.க அமைச்சர்கள் பலர் வழக்கைக் கண்டு நடுங்கி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வாய்தா வாங்கிய இவர்கள் ஆட்சிக்கு வந்த பின் அவசர அவசரமாக வழக்கை நடத்தினார்கள்.

அ.தி.மு.க என்ற இயக்கத்துக்கு யார் துரோகம் செய்கிறார்களோ அவர்களுக்கு சிறை தான் தண்டனை; அதற்கு செந்தில் பாலாஜியே உதாரணம். சாதாரண செந்தில் பாலாஜியை அடையாளம் காட்டியது அ.தி.மு.க தான்,  நன்றி உள்ளவராக இருந்தால் கட்சிக்கு பணி செய்திருக்க வேண்டும். ஆனால் தீய சக்தியோடு சேர்ந்து மீண்டும் அமைச்சரானார். அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு தெய்வங்கள் இன்று வரை தக்க தண்டனையை கொடுத்துள்ளது. எனவே அ.தி.மு.க.வை உடைக்க நினைத்தாலும், துரோகம் விளைவித்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை சிறை தண்டனையாக தான் இருக்கும். 

கடலூர் மாவட்டத்தில் புயல் வெள்ளம் என்ற இயற்கை பேரிடர் காலத்தில் விவசாயிகளின் துன்பத்தை உடனடியாக போக்கியது அ.தி.மு.க அரசு.  விவசாயிகள் வாழ்க்கையில் ஏற்றம் பெற ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இந்த ஆட்சியில் இல்லை. எனவே கடலூர் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை காட்டுங்கள். தேர்தல் என்ற போர்வையில் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றி காண்போம். வடலூர் வள்ளலார் பெருவெளியை தைப்பூசத்தின் போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில் தற்போது தி.மு.க அரசு அந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சர்வதேச மையம் அமைக்க உள்ளது. இதற்கு இப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மக்களின் கோபத்திற்கு தி.மு.க அரசு ஆளாகியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே பகுதியில் உள்ள புறம்போக்கு இடத்தில் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும்” என்றார்.

Next Story

“எடப்பாடி இதை செய்தால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” - ஆ. ராசா ஆவேசம்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 A. Rasa says If Edappadi does this, I will resign from my post

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.

நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.

அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.