Skip to main content

ஈரோட்டில் மேலும் ஒருவருக்கு கரோனா... காரணம் என்ன?

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
erode district




வெளியூரிலிருந்கு வருபவர்களால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஈரோடு மாவட்ட மக்கள் மத்தியில் தொடர் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று தொடக்கத்தில் கண்டறியப்பட்டாலும், மாவட்ட நிர்வாகத்தின் பல கட்ட தடுப்பு நடவடிக்கையால் கரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டது. இப்போது கரோனா கட்டுக்குள் இருக்கும் மாவட்டமாக ஈரோடு உள்ளது. அதே போல் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு, தொழில் நிறுவனங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதனால், பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் வேலை பார்த்து வந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு மீண்டும் திரும்பி வருகின்றனர். அப்படி சென்ற வாரம் வந்த ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சேலம் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக சென்ற இரு நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்த 40 வயதுடைய ஒரு நபர் விமானம் மூலம் கோவை வந்துள்ளார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதியானது. கொடுமுடியை சேர்ந்த அந்த நபரை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

இந்த நிலையில் தான் சென்னையில் பணியாற்றி வந்த  ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த 35 வயது பெண், ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால் அவர் நேற்று மாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் வந்தார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அவர் கார் மூலம் ஈரோடு வந்து அவரது வீட்டுக்குச் சென்றார். சேலத்தில் அந்த பெண்ணுக்கு செய்யப்பட்ட  பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி என தகவல் வந்தது. இதனால்  மருத்துவ குழுவினர் அதிர்ச்சி அடைந்து போலீசார் துணையுடன் அந்தப் பெண வீட்டுக்குச் சென்றனர். அந்த பெண்ணை உடனடியாக  மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுத்து வருகின்றனா். இதனால், ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்து விட்டது.


ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 70 பேருக்குத்தான் கரோனா தொற்று இருந்தது. மாவட்ட அதிகாரிகள் சுகாதார துறை, பனியாளர்களின் தொடர் உழைப்பால் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு 40 நாட்களை கடந்தது. ஆனால் வெளியூரிலிருக்கு வரும் நபர்கள் அவர்கள் முன்பு இருந்த ஊர்களில் முறையாக பரிசோதனை செய்து கொள்ளாமல் ஈரோட்டுக்கு வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் தான் இந்த மூவரும். இப்போது இவர்களால் இந்த வைரஸ் தொற்று மாவட்டத்தில் 73 ஆக அதிகரித்துள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.