Advertisment

தேர்தல் தீர்ப்பு நாள்; தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்

Election Judgment Day; Counting centers in readiness

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாக தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisment

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சீல் அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவருகின்றன. அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து தபால் வாக்குகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் மற்றும் காவலர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றுள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் அனுமதி அட்டையை பரிசோதித்து உள்ளே விடும் நடைமுறை தொடங்கியுள்ளது.

Advertisment
admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe