கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில்இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு அல்லது பிற மாநிலங்களுக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால் எதிர்க்கட்சியானதிமுக மற்றும் பாஜகசார்பில் கூட இந்த இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அண்மையில் இ-பாஸ் முறையைஎளிமைப்படுத்த இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமிகூறியிருந்தார். இந்நிலையில் தற்பொழுது விண்ணப்பித்த அனைவருக்குமே இ-பாஸ் கிடைக்கும். ஆதார் அல்லது ரேஷன், அட்டை நகல், தொலைபேசி எண்ணுடன்விண்ணப்பித்தால் இ-பாஸ்வழங்கப்படும் என இ-பாஸ்நடைமுறையில் தளர்வுகளைதமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே இ-பாஸ்விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
திருமணம், இறப்பு,மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டுமே இ-பாஸ் என்றகட்டுப்பாடு தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது. புதிய இ-பாஸ்நடைமுறை வருகின்ற 17 ம் தேதி முதல்அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவதற்கான இ-பாஸ் நடைமுறை மாற்றம் இன்றி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.