நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்ற 13 திமுக எம்.எல்.ஏ.க்களும் சபாநாயகர் தன்பால்பதவி பிரமாணம் செய்துவைக்க, தற்போது பதவியேற்றுக்கொண்டனர்.

dmk mlas

Advertisment

இந்த நிகழ்வில் திமுக தலைவர் முன்னிலை வகித்தார். உடன் டி.ஆர். பாலு, பொன்முடி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்மூலம் சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் பலம் 98லிருந்து 101 ஆக உயர்ந்தது.

Advertisment

பதவியேற்றுக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள்

பூந்தமல்லி - ஆ.கிருஷ்ணசாமி

பெரம்பூர் - ஆர்.டி.சேகர்

திருப்போரூர் -எஸ்.ஆர். இதயவர்மன்

குடியாத்தம் (தனி) - எஸ். காத்தவராயன்

ஆம்பூர் - அ.செ. வில்வநாதன்

ஓசூர் - எஸ்.ஏ. சத்யா

திருவாரூர் - பூண்டி. கே. கலைவாணன்

தஞ்சாவூர் - டி.கே.ஜி. நீலமேகம்

ஆண்டிப்பட்டி - எ. லோகிராஜன்

பெரியகுளம் (தனி) - கே.எஸ். சரவணகுமார்

அரவக்குறிச்சி - வி. செந்தில்பாலாஜி

திருப்பரங்குன்றம் - பி. சரவணன்

ஓட்டப்பிடாரம் (தனி) - எம்.சி. சண்முகையா