DMK LEADER RS BHARATHI GOVERNMENT CHIEF LAWYER NOTICE

Advertisment

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் அரசு தலைமை வழக்கறிஞருக்கு மனு கொடுத்திருந்தார். ஆண்டனிராஜின் மனுவைக் காணொளியில் விசாரித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீதிபதிகளை அவமதித்து பேசியது பற்றி இரண்டு வாரத்தில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைதான வழக்கில் ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.