ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்தின் வெளியேவுள்ள எஸ்.பி.ஜி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 9 தீயணைப்பு வாகனங்களுடன் பிரதமரின் இல்லத்தின் எஸ்.பி.ஜி வளாகத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் அலுவலகம், சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (எஸ்பிஜி) கட்டடத்தின் வளாகத்தில் மின்கசிவால் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Show comments