அரசு சார்பில் உள்ள தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு ரூபாய் 16.66 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.
சென்னை, ராணிப்பேட்டை, திருப்பூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்ட முகாம்களின் கட்டமைப்பை வலுப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மாநில பேரிடர் நிதியிலிருந்து முகாம்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.