Advertisment

அமைச்சர் கல்லூரியில் இருந்து வெளியேறிய கண்டெய்னர்! அதற்குள் இருப்பது என்ன?

ttttt

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் 3வது முறையாக அதிமுக கூட்டணி வேட்பாளராக அமைச்சர் விஜயபாஸ்கரும் திமுக கூட்டணி சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த திமுக தென்னலூர் பழனியப்பனும் போட்டியிடுகின்றனர்.

Advertisment

அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாக தொகுதிகளை சுற்றி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த வாரம் திமுக மா.செ (பொ) செல்லப்பாண்டியன் தலைமையிலானோர் விராலிமலை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் ஒன்று கொடுத்தனர். அந்தப் புகாரில்.. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவரது மேட்டுச்சாலை கல்லூரியில் பரிசுப் பொருட்களை வைத்திருப்பதாகவும் அதனை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

ஆனால் தேர்தல் அதிகாரிகள் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் திமுகவினர் புகாரில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் மேட்டுச்சாலை மதர்தெரசா கல்லூரி வளாகத்தில் இருந்து இன்று காலை 11.20 மணிக்கு ஆந்திர பதிவு எண் ( ஏபி 99 யூ 9755) கொண்ட ஒரு கண்டெய்னர் வெளியேறி புதுக்கோட்டை நோக்கி சென்றது. போன வாரம் திமுக புகார் கொடுத்த நிலையில் இந்த வாரம் ஒரு கண்டெய்னர் வெளியேறியது பரபரப்பாக உள்ளது. தேர்தல் அதிகாரிகள் தான் அந்த கண்டெய்னரில் என்ன இருந்தது என்பதை சொல்ல வேண்டும் என்கின்றனர் திமுகவினர்.

container lorry admk pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe