Skip to main content

காடுகளை நாசமாக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்!!! அமைச்சர் வேலுமணி காரணமா???

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

கோவையில் காடுகளை அழிக்கும் வகையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் புதிய கட்டுமான பணிகளை கோயம்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி எந்த ஒரு அனுமதியுமில்லாமல் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை மேற்கொள்வதால் அங்குள்ள வனவிலங்குகளும், காடுகளும் அழியும் சூழல் உருவாகியுள்ளது.
 

kovai


கோவை மாவட்டம், பேரூர் வட்டம், ஆலாந்துரை கிராமம், காளிமங்கலம் பகுதி, கோவை வனக்கோட்டம், போளுவாம் பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் மாவட்ட சுற்றுசூழல் கமிட்டி மற்றும் மலையிட பாதுகாப்பு குழுவினால் (HACA) பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. யானைகள் மற்றும் சிறுத்தைகளின் பிரதான வாழ்விடமாகவும், நொய்யலாற்றின் நீராதார பகுதிகளாகவும் விளங்குகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட இண்டஸ் பொறியியல் கல்லூரி சென்னை உயர்நீதிமன்ற உத்திரவினை அடுத்து கடந்த 2014ம் ஆண்டில் சீல் வைக்கப்பட்டது. 

சூழலியல் ரீதியாக மிக முக்கியமான பகுதியாக விளங்கும் இந்த பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வெளியில் தெரியாமல் ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பை எந்த ஒரு அனுமதியுமில்லாமல் கட்டி வருவது தற்போது வெளியில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்ட பொறியியல் கல்லூரி மூடப்பட்டது தெரிந்தும், எந்த ஒரு அனுமதியுமில்லாமல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சுமார் 600 வீடுகளை இங்கு வனத்தை ஒட்டி கட்டுவதன் மூலம்  யானைகள் வாழ்விடம் மற்றும் இடம்பெயர்தால் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதி வனமும் அழியும் சூழல் உருவாகியுள்ளது. இப்பணிகள் அனைத்தும் தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் வருகிறது. இது அமைச்சர் வேலுமணியால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது எனவும் கூறுகின்றனர். மேலும் கிராம மக்களின் எதிர்ப்பையும்மீறி செயல்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே போளுவாம்பட்டி வனச்சரகத்தை ஒட்டித்தான் காருண்யா, சின்மயா, ஈசா யோகமையம், உள்ளிட்ட பல பெரு நிறுவனங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களுக்காக நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ளன. தற்போது அவர்களை காப்பாற்ற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டுகின்றனர் என்கின்றனர் கோவையை சேர்ந்த முக்கிய அரசு அதிகாரிகள்.

 

-சிவா


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.