hhhhhhhh

Advertisment

நக்கீரன் கோவை செய்தியாளர் அருள்குமார். 46 வயதான அருள்குமார் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

சமூகத்தில் நடக்கும் பல அவலங்களை நக்கீரனில் வெளிக்கொண்டு வந்துள்ளார். கோவை ஈஷாவில் நடக்கும் விதி மீறல்கள், பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள், கொடநாடு சம்பவங்கள், கோவை சின்மயா வித்யாலயா பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை புலனாய்வு செய்து நக்கீரனில் செய்தியாக்கி உள்ளார்.

அருள்குமார், சிறந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, நல்ல இலக்கிய வாசிப்பும் கவிதை எழுதும் திறனும் உடையவர். இவரது கவிதை தொகுப்பும் வெளிவந்துள்ளது.

Advertisment

அருள்குமாரின் மறைவு நக்கீரன் குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு செய்தி நக்கீரன் குடும்பத்தினர் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது. கோவை பத்திரிகையாளர்கள் வட்டத்திலும் இவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.