சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும், அருகேயுள்ள வார்டுகளில் இருந்த நோயாளிகளை அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தி பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment