chennai ayanavaram children incident puzhal prison

Advertisment

கடந்த 2018- ஆம் ஆண்டு சென்னை அயனாவரம் சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் காவலாளி பழனி உட்பட மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் காவலாளி பழனி, பிளம்பர் சுரேஷ் உட்பட நான்கு பேருக்கு ஆயுட்கால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைதி பழனி சிறையில் தனது லுங்கியால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.