ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1409 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்று கட்டுக்குள் வராததால் மே 3-ந் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கு அமலில் இருக்கிறதா? என கேட்கும் வகையில் சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் இன்று வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT