Skip to main content

தொடரும் தோல்விகள்..! எங்கே போனது மோடி அலை?

Published on 01/06/2018 | Edited on 01/06/2018

இடைத்தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரேயொரு ஆண்டு மட்டுமே இருக்கும் சூழலில், பா.ஜ.க.வின் இந்தப் பின்னடைவு 2014ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட மோடி அலை எங்கே போனது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
 

Modi

 

மோடி பிரதமராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அடுத்தடுத்த தோல்விகளின் மூலம் பா.ஜ.க. மக்களவையில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது. மொத்தம் 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை வெறும் 273 மட்டுமே. இந்நிலையில், இந்த நான்கு ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் மற்றும் அவற்றில் பா.ஜ.க.வின் நிலை குறித்து பார்க்கலாம். 
 

2014ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 27 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அதில் பா.ஜ.க. தான் போட்டியிட்ட 24 தொகுதிகளில், வெறும் ஐந்தில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தன் கைவசம் இருந்த 13 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை இழந்திருக்கிறது. அதேசமயம், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பா.ஜ.க.வால் ஒரு இடத்தைக் கூட இதுவரை கைப்பற்ற முடியவில்லை. 
 

Modi

 

மேலும், பா.ஜ.க.வுக்கு 2018ஆம் ஆண்டு மிகவும் மோசமான தேர்தல் முடிவுகளையே தந்திருக்கிறது. அதாவது, இதுவரை பா.ஜ.க. தான் இழந்த 8 தொகுதிகளில் கோரக்பூர், புல்பூர், அஜ்மீர், ஆல்வார், கைரானா மற்றும் பந்த்ரா கோண்டியா ஆகியவற்றை இழந்தது இந்த ஆண்டில்தான். ஆனால், காங்கிரஸோ பா.ஜ.க.விடம் இருந்து நான்கு தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் கணிசமான இடங்களைக் கைப்பற்றி இருக்கின்றன. 
 

ஆந்திராவில் கூட்டணிப் பிளவு, கர்நாடகாவில் தோல்வி என தென்னிந்திய நம்பிக்கை தகர்க்கப்பட்ட நிலையில், தற்போது வடமாநிலங்களிலும் தோல்வியை எதிர்கொண்டு வருகிறது பா.ஜ.க. இடைத்தேர்தல் தோல்வி என்பது பா.ஜ.க.வின் வியூகம் என்று சொல்வீர்களானால், பெரும்பான்மை இழப்பின் மூலம் சொந்த பிம்பம் நொறுக்கப்படுவதை அது விரும்புமா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டும்தானே. இன்னும் ஒரே ஆண்டுதான் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பா.ஜ.க.வை எதிர்க்கின்றன. இப்போதே மோடி அலை தொலைந்துவிட்டதா? என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன. அடுத்த ஆண்டு அதற்கான விடை கிடைத்துவிடும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா; கையும் களவுமாக சிக்கிய நபர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election flying squad caught the person who paid money to vote for the bjp

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  இதனையொட்டி வாக்குப் பதிவுக்கான பணிகள் மாநிம் முழுவதும் அதிதீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தாமரை சின்னத்திற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை தேர்தல் படக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பெரம்பலூர் தொகுதியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில்தான் குளித்தலை அருகே உள்ள ராஜேந்திரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி  ஐஜேகே சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தருக்கு தாமரை சின்னத்தில்  வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை  நிலையான குழுவினர் அங்கு சென்றபோது அங்கு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா அழகரையை சேர்ந்த அஜித் என்பவரிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல் செய்தனர். பின்னர்  பறக்கும் படையினர் அவரை குளித்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 60 ஆயிரத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைத்தனர்.