Skip to main content

EXCLUSIVE - பிக்பாஸ்-2 வில் பங்கு பெரும் போட்டியாளர்கள் யார்யார்?

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
big


பிக் பாஸ் நிகழ்ச்சி தென் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஒன்றாகும். பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு தமிழ் மொழியிலும் அறிமுகமாகி மக்கள் அனைவரையும் தொலைக்காட்சி முன்பு கட்டிப்போட்டு வைத்திருந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு அடிமையாகியிருந்தார்கள்.

பிக் பாஸ் முதல் சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் கமல்ஹாசன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்கத் தொடங்கினர். பின்னர் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் காரணமாக தொடர்ந்து விடாமல் ரசிக்க ஆரம்பித்தனர். இதனால் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி முதலில் 60 லட்சம் பேர் மட்டுமே பார்ப்பார்கள் என்று எண்ணிய நிலையில் 5 கோடி பேரால் பார்க்கப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது.
 

big boss 1

 

 

இந்நிலையில், கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 2 இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. முதல் சீசனைப் போலவே இதற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டின் செட், பூந்தமல்லியை அடுத்து ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளும் அந்த வீட்டுக்குள்ளேயே இருக்கும். இந்தப் பிக் பாஸ் சீஸனிலும் அதே இடத்தில்தான் பிக்பாஸ் வீட்டின் செட் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றே முடிந்து விட்டது. இந்நிலையில், முதல் சீசனில் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது' என்றபடி கமல் கூறியது வைரல் ஹிட் ஆன நிலையில் இந்த சீசனில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என கமல் கூறுகிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் தற்போதே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் விவரங்களை அந்த தொலைக்காட்சி நிறுவனம் ரகசியமாகவே வைத்துள்ளது.
 

 

big


இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில்,

1. யாஷிகா ஆனந்த் (திரைப்பட நடிகை)

2. பொன்னம்பலம் (வில்லன் நடிகர்)

3. மும்தாஜ் (திரைப்பட நடிகை)

4. தாடி பாலாஜி (திரைப்பட நடிகர்)

5. நித்யா (தாடி பாலாஜி மனைவி)

6. ஜனனி ஐயர் (திரைப்பட நடிகை)

7. மமதி சாரி (தொகுப்பாளினி)

8. ஆனந்த் வைத்தியநாதன் (பாடகர்)

9. சென்ட்ராயன் (திரைப்பட நடிகர்)

10. மகத் (திரைப்பட நடிகர்)

11. ஐஸ்வர்யா தத்தா (திரைப்பட நடிகை)

12. டேனியல் ஆனி போப் (திரைப்பட நடிகர்)

13. ரித்விகா (திரைப்பட நடிகை)

14. ஷாரிக் கான் (நடிகர் ரியாஸகான் மகன்)

15. ரம்யா (NSK)

16. வைஷ்ணவி (ஆர்.ஜே)
 

b


என மொத்தம் 16 பிரபலங்கள் இந்த சீசன் 2வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனுடன் நடிகர் பவர்ஸ்டார் வெயிட்டிங் லிஸ்டில் உள்ளார். மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் சீசன் 1ல் பிரபலாமான காதல் ஜோடி நடிகை ஓவியா, ஆரவ் உள்ளிட்டோர் வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சாண்டியை மறந்த கவின்...? கவினை மறக்காத சாண்டி...!!!

Published on 06/10/2019 | Edited on 07/10/2019

பிக் பாஸ் சீசன்  3 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்வில் பிக்பாஸ் இல்லத்தின் உள்ளே 105 நாட்களாக வெற்றிகரமாக இருந்த சாண்டி மற்றும் முகேன் ஆகிய இருவரில் யாருக்கு வெற்றி என்பதை அறிவிக்கும் கட்டம் வந்தது. நாம் முன்பே கூறியது போல பிக் பாஸ் 3 வெற்றியாளர் பட்டத்தை முகேன் பெற்றார். இருந்தாலும் இறுதிவரை சிறந்த ஒரு போட்டியாளராக தொடர்ந்த சாண்டிக்கும் நினைவு பரிசு பதக்கம் வழங்கப்பட்டது.

 

BIGBOSS 3 TITTLE WINNER MUKEN


இந்த நிகழ்விற்கு முன்னதாக ஒவ்வொருவரிடமும் யார் வெற்றி பெற்றால்நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களின் பெயர்களை கூறினர். கவின் தனது விருப்பமாக கூறும்போது நான்கு பேரில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான். இருந்தாலும் லாஸ்லியா வெற்றி பெற்றால் இன்னும் பெருமை அடைவேன் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் லாஸ்லியா மீதான கவினின் கூடுதல் அன்பு வெளிப்பட்டது. அதேநேரம் சாண்டி வீட்டினுள்ளே இருந்த இருந்தபொழுது கவினும் சாண்டியும் தாங்கள் முன்பே சில திட்டங்களை செய்து வைத்திருப்பதாகவும், அந்த புரிதலின் படி தான் கேமை விளையாடி வருவதாகவும் அவ்வப்போது கூறி வந்துள்ளனர்.

 

BIGBOSS 3 TITTLE WINNER MUKEN

 

அதுமட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் பிக்பாஸ் போட்டிக்கு முன்பே நெருங்கிய நண்பர்கள் என்றும், பல வருடங்களாக ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும் கூறிவந்தனர். இந்நிலையில் கவின் தனது விருப்பமாக லாஸ்லியாவை தெரிவித்தார். சாண்டி நிறைவு நாளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசு பதக்கத்தை கவினை மேடைக்கு அழைத்து அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் தான் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றதற்கும், வெற்றிகரமாக கடந்து வந்ததற்கும் கவினுக்கு பங்கும் உண்டு என்று கூறினார்.

இந்த வகையில் சாண்டியின் பெயரை கவின் கூற மறந்தாலும், கவினை  மேடைக்கு அழைத்து பரிசை அணிவித்து  பெருமைப்படுத்தினார் சண்டி.

 

 

Next Story

பாதுகாப்பு குறைபாடு: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் உயிரிழப்பு?

Published on 08/09/2018 | Edited on 10/09/2018
​    ​child


கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு, தற்போது 8 பேர் வெளியேறிய நிலையில் இன்று சனிக்கிழமை படப்பிடிப்பு நடந்தது.
 

இதில் கலந்துகொள்ள கமல் மற்றும் பொதுமக்கள் வருகை தர இருந்தனர். இந்த சமயத்தில் நேற்று இரவு அரியலூர் மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கை கழுவும்போது மாடியில் இருந்து விழுந்து பலியானதாக சொல்லப்படுகிறது. 
 

ஆனால், இதில் பல சந்தேகங்கள் கிளம்பியுள்ளது. கை கழுவும் இடம் அவ்வளவு பாதுகாப்பு இடமா? மேலும் இந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடுகள் உள்ளதா? அல்லது ஊழியர்களுக்குள் இடையே நடந்த மோதலில் குணசேகரன் கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் சென்னை நசரதபேட்டை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

கடந்தமுறை நடந்த இதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு தொழிலாளி பலியானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கமல் தொகுத்து வழங்கும் இந்த வார படப்பிடிப்பு காலதாமதமாக நடந்து வருகிறது.