இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரும் பெரியார் மீது பற்றுக்கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இவரை இவருடைய குடும்பத்தினருக்கே பிடிக்காமல்தான் இருந்திருக்கிறது. முரட்டுத்தனமாக திரிந்த இவர் தந்தையிடம் அடிவாங்கும் அளவுக்கு மோசமான நடத்தைகளைக் கொண்டிருந்தார்.
எனவேதான், ராணுவத்தில் சேரும் நிலை ஏற்பட்டது. மத்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்த செந்தில்குமார், அங்கு பா.ஜ.க. ஆதரவு குழுவில் சேர்ந்திருக்கிறார். வீட்டிற்கு வரும்போதெல்லாம் பெற்றோருடன் தகராறு நடப்பது வாடிக்கையாக இருந்திருக்கிறது. பாதுகாப்புப் படையில் காவிக் கும்பலில் இணைந்ததால் வந்த வினைதான் பெரியார் சிலை உடைப்பு என்கிறார்கள் இவரைப் பற்றி தெரிந்தவர்கள்.
இப்போது, சிலை உடைப்பில் கைதாகி இருக்கும் செந்தில்குமாரின் வேலைக்கு ஆபத்து இருக்குமா என்பது தெரியவில்லை.